மேலும் அறிய

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை மாவட்டம் - ஆட்சியரின் அதிரடி உத்தரவுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் இந்த பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலை

கூட்டத்தில், பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், அவசர காலங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக விளக்கினார். ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் செல்லும் கால்வாய்களின் கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக அடைப்பதற்குத் தேவையான மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க, போதுமான புல்டோசர்கள், ஜேசிபி இயந்திரங்கள், பவர்சா மற்றும் டிராக்டர்கள் போன்ற உபகரணங்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அவசரகாலத் தேவைக்காக, ஜேசிபி மற்றும் டிராக்டர் உரிமையாளர்களின் தொலைபேசி எண்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக் கொண்டார்.

சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள்

பருவமழை காலத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மலேரியா, காலரா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளையும், மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு, காய்ச்சிய குடிநீரைக் குடிக்குமாறு ஒலிபெருக்கிகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் சுகாதாரக் குடும்ப நல துணை இயக்குநர், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மழைக்காலம் முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளைப் போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு

பருவமழைக் காலத்தில் எந்தவொரு இடர்பாடுகளையும் திறம்பட எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் முக்கிய அரசுத் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் கூறினார். இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது சீரிய முறையில் செயல்படுவதற்கு, அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் முன்தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முக்கிய அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர், புல்டோசர், ஜேசிபி, மரம் அறுக்கும் கருவி போன்ற கனரக வாகனங்களை தயார் நிலையில் வைத்து, 24x7 நேரமும் பணியாற்றுவதற்குத் தேவையான ஊழியர்களை நியமித்து, அதன் விவரங்களை பேரிடர் மேலாண்மைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு மற்றும் நிவாரணப் பணிகள்

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். மேலும், தேவையான மருந்துகளைப் போதிய அளவில் இருப்பு வைத்திருக்கவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறைக்கு அறிவுறுத்தினார்.

கடந்த கால அனுபவங்கள் 

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, புயல் அல்லது வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். மேலும், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இணைந்து ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, அதன் நடவடிக்கை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நலினா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget