மேலும் அறிய

சிவகங்கை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம்.. புதிய அறிவிப்பு, அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விழுதுகள் (DEIC) மையத்தில் மேற்சொன்னவாறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் பிரதிவாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவகங்கை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள                        விழுதுகள் மையத்தில் நடைபெறவுள்ளது -  சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள்
 
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் ஒரே மாதிரி முறையில் நடத்தப்பட வேண்டும் என அரசாணை (அரசாணை எண்: 30 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மா.தி.ந (3.1) நாள்:04.11.2022)  பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் வேறு வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனை மாற்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள விழுதுகள் (ஆரம்ப நிலை கண்டறிதல்) மையத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
அதன்படி, புதன் கிழமைகளில் கை, கால் இயக்க குறைபாடுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு, குள்ளத்தன்மை, அமில் வீச்சால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் இரத்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கும் வெள்ளிக்கிழமைகளில் அறிவு மற்றும் மனநலக்குறைபாடுகள் மற்றும் நரம்பியல் சார்பு குறைபாடுடையோர்களுக்கும் நடைபெறவேண்டும் என அரசாணையில் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திலும் திங்கட்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் இனிவரும் காலங்களில் 08.10.2025 புதன்கிழமை  அன்று முதல் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விழுதுகள் (DEIC) மையத்தில் மேற்சொன்னவாறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவுள்ளது. 
 
என்ன ஆவணங்கள் கொண்டுவரவேண்டும்
 
இம்முகாமில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை www.swavlambancard.gov.in என்ற இணையதளத்தில்  Apply for UDID  என்ற பக்கத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து அதன் ஒப்புகைச்சீட்டு மற்றும் 3 சமீபத்திய மார்பளவு புகைப்படம், ஆதார் நகல், மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன்  முகாம் நடைபெறும் நாளில் நேரில் சென்று கலந்து கொண்டு பயன்பெறலாம் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget