மேலும் அறிய

பரமக்குடி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நிரந்தர அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

’’30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லை, குடிநீர் வசதியில்லை, மின்சார வசதியில்லை என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து வந்தனர்’’

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று  பள்ளிகளுக்கும், இன்று பள்ளி,கல்லூரிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் நீர்வழிபாதைகளை நிரப்பி வீடுகள் கட்டி உள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.


பரமக்குடி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நிரந்தர அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

இதன் காரணமாக நீர்நிலைகளில் கட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல நிற்கிறது. இந்த மழைநீரில் வேறுவழியின்றி நடந்து சென்று  பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


பரமக்குடி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நிரந்தர அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

இந்த நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி எல்லைக்குட்பட்ட 28-வது வார்டு சேர்ந்த எம் ஜி ஆர் நகர், கிழக்கு பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர், இருளர் இன சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்கள் நேற்று முன் தினம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லை, குடிநீர் வசதியில்லை, மின்சார வசதியில்லை என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்து வந்தனர். 


பரமக்குடி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நிரந்தர அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

இந்நிலையில் நேற்று அப் பகுதிக்கு ஆய்வு செய்ய வருகை தந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், பரமக்குடி வருவாய் வட்டாட்சியர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர்(பொ), மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், இனி ஒருபோதும் எங்களால் சாக்கடையிலும் சகதியிலும் வசிக்க முடியாது எனவும் தாங்கள் தற்போது செய்ய வந்திருக்கும் நிவாரண பொருட்கள் வேண்டாம் எங்களுக்கு நிரந்தரமாக சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி போன்றவைகள்தான் வேண்டுமென முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.


பரமக்குடி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள் - நிரந்தர அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

இந்நிலையில் கடந்த முப்பதாண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த பழங்குடியின மக்களிடம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்களும் பரமக்குடி வருவாய் வட்டாட்சியர் அவர்களும் உங்கள் பகுதியில் நில அளவைகளை சீர் செய்து அடிப்படை வசதிகளை நிச்சயம் செய்து தருவதாக, உறுதி அளித்த பின்பு நிவாரண பொருட்களை மக்கள் பெற்றுச் சென்றனர். ஆற்று நீரால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரை பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராடியதும், நிவாரண பொருட்கள் வேண்டாம், நிரந்தரமாக அடிப்படை வசதிகள்தான்  வேண்டும் என  அங்குள்ள பழங்குடியின மக்கள் வைத்த கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget