மேலும் அறிய

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் பணிசெய்து வருகின்றனர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.தெரிவித்துள்ளது.

 
 

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ளது என்றாலும் ஊரடங்கு தளர்வு காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். மூன்றாவது அலையின்போது, அதிகமான பாதிப்பு இருக்கலாம் என எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து வந்தாலும் முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தும் என எந்த ஒரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா நோய்க்கு எதிராக மாஸ்க் அணிதல்,  கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற முக்கிய விதிகளை அரசு தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் என தெரிவிக்கிறது.
 

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
 
இந்நிலையில் திருச்சி காவல்துறையினர் வாகன தணிக்கை பணியில் இருக்கும்போது, தெப்பக்குளத்தான்கரை பகுதியில் 5 இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது அந்த இளைஞர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டதோடு, தாக்க முயன்றுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த காஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், " காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர். கொரோனா அசாதாரண சூழலில் ஒவ்வொருவரும்  உணர்ந்து செயல்படவேண்டும். அதோடு காவல்துறையினர் தங்களது பணிகளைச் செய்கிறார்கள். அவர்கள் கேள்வி எழுப்பும் போது அதற்கு உரிய முறையில் தகவல் கொடுக்கவேண்டும். காவல்துறையை துஷ்பிரயோகம் செய்வது, அச்சுறுத்தல் அடையச் செய்வது ஆகியவற்றை ஏற்கமுடியாது. இந்த கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில் இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக்கோரி நீதிமன்ற பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்.  பத்தாயிரம் ரூபாயை மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் கூட்டமைப்பிற்கு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் .

காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களை சாதாரணமாக விடப்போவதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
 
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறும் நபர்கள் ஏராளம். அவர்களிடம் காவல்துறையினர் முறையாக கேள்வி எழுப்பும்போது, சிலர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக செயல்பட முயற்சிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிலர், காவலர்களிடம் ஒருமையில் பேசி அவமானப்படுத்தும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. இது போன்ற செயல்கள் சமூகத்திற்கு தவறான சிந்தனைகளை கற்பிக்கலாம். எனவே கொரோனா காலத்தில் மக்களுக்காக பணிசெய்யும் காவல்துறையினரிடம் பண்பான நடத்தையைப் பின்பற்ற வேண்டும்.
 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget