மேலும் அறிய

Mullaperiyar Dam: வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை.. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் கேரளாவிற்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம்,கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு, முல்லைக்கொடி, தாண்டிக்கொடி, ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்திருந்தது. இந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 141 அடியை எட்டியது. மேலும் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக 142 அடியை எட்டவுள்ளது.

Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Mullaperiyar Dam: வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை.. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

Salaar Boxoffice: 2 நாள்களில் 300 கோடிகளை நெருங்கிய வசூல்.. சலார் சாதனையால் கதிகலங்கிய சினிமா வட்டாரம்!

கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கான நீர்திறப்பு குறைக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.92 அடியை எட்டியது.

Mullaperiyar Dam: வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை.. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

Watch Video: முதல் பாதியில் ஒற்றை ஆளாக மொத்த புள்ளிகளையும் தூக்கிய ஹிமான்ஷு நர்வால்.. வைரலாகும் வீடியோ..!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கிவைக்க முடியும்.  இதனால் கேரள பகுதிகளுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.142 அடி எட்டியவுடன், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு நீர்வரத்திற்கேற்ப, உபரிநீர் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேற்றப்படும். இதனால் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புத்தரா உள்ளிட்ட முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் வசிக்கும்  மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  மேலும் நீர்வரத்திற்கேற்ப தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவும் அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget