மேலும் அறிய
பேச்சாளர்கள் கவனத்திற்கு; எதிர்காலத்தை உணர்ந்து பேசுங்கள்: அமைச்சர் பிடிஆர் அறிவுரை
300 பேர் மத்தியில் மட்டுமே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம், என்று நினைத்து பேசக்கூடாது. இந்தப் பேச்சு பதிவு செய்யப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அது மீளாய்வு செய்யப்படலாம்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
Source : whatsapp
பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும் - உலகத்தமிழ்சங்க பன்னாட்டு பயிலரங்க நிறைவு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
மதுரை உலகத்தமிழ்சங்க கூட்டரங்கில் தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு -ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்க நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்...,” பேச்சாளர்களுக்கு உரையாற்றுவது எனக்கு பொருத்தமா என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் நான் நிறைய பள்ளிகள், கல்லூரிகளில் படித்தேன், பல்வேறு நாடுகளில் சில பல்கலைக் கழகங்களில் நான் பட்டம் படித்தேன். என்னைக்குமே அந்த கல்வி அரங்கங்களில் பேச்சாளராகவோ, விவாத மேடைகளையோ பங்கேற்றதே கிடையாது. ஆனால் இங்கே மாவட்ட ஆட்சியர் கூறியது போல பேச்சாற்றல் வெறும் பேச்சாற்றலாக மட்டும் இல்லாமல் அதில் கருத்தும் தத்துவங்களும் நிறைந்திருக்க வேண்டும்.
பேச்சுப்பதிவு செய்யப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அது மீளாய்வு செய்யப்படலாம்
மேலும் இங்கு ஒரு 300 பேர் மத்தியில் மட்டுமே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம், என்று நினைத்து பேசக்கூடாது. இந்தப் பேச்சு பதிவு செய்யப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அது மீளாய்வு செய்யப்படலாம் என்ற நோக்கோடு எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும். என்னை இன்று உலகெங்கிலும் யார் சந்தித்தாலும் முதலில் சொல்லக்கூடிய வார்த்தை உங்கள் பேச்சை யூ டியூப் மூலம் பார்த்தோம், என சிலாகித்து கூறுவார்கள். இதே அரங்கில் நான் பேசிய எத்தனையோ விஷயங்கள் வைரலாகி உள்ளன. எனவே பேச்சாளர்கள் இதனை உணர்ந்து பேச வேண்டும். தமிழ் இணைய நூலகத்தில் வரலாற்றில் உள்ள அத்தனை பக்கங்களும் நிரம்ப கிடைக்கின்ற. நூல்கள் இருக்கின்றன. அதில் இருந்து கடந்த கால நினைவுகளை வரலாறு பற்றிய தரவு எடுத்துக்கொள்ள பேச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட அமைச்சர்
தொடர்ந்து 38 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற பேச்சாளர்கள், இலங்கையிலிருந்து வருகை தந்த பேச்சாளர்கள் அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,கோ தளபதி எம் எல் ஏ., உலகத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் ந. அருள்,உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















