மேலும் அறிய

Madurai High Court: பொதுப்பாதையை ஆக்கிரமித்து தனி நபர் கட்டிய கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் நகராட்சி ஆணையர் ஆகியோர் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை 2 வாரத்திற்குள் இடிக்க உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து முறையாக அனுமதி பெறாமல் தனி நபர் கட்டிய கட்டிடத்தை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
கரூர், தாந்தோணி பகுதியை சேர்ந்த குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "திண்டுக்கல் மாவட்டம், அண்ணா நகர் பகுதியில் சர்வே எண்: 1954/1B ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 40 அடி பொது சாலை அமைந்துள்ளது. இந்த பொது சாலையை ஆக்கிரமித்து ராஜா என்ற தனிநபர் அனுமதி இன்றி கட்டிடம் கட்டி வருகிறார். எனவே, 40 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதை நிறுத்தி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ராஜா என்பவர் எந்த வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியுள்ளார்.
திண்டுக்கல் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ்க்கும் முறையான பதில் அளிக்கவில்லை. வழக்கறிஞர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையிலும் முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் நகராட்சி ஆணையர் ஆகியோர் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை 2 வாரத்திற்குள் இடிக்க உத்தரவிட்டனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மற்றொரு வழக்கு

 பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் தனக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தொடர்ந்த  வழக்கில்,மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 
மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த மகா சுசீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளேன். கிராமங்களில் பாரதிய ஜனதாவின் கொள்கைகள் சென்றடையவில்லை. இதனால் களப்பணிகளை முன்னெடுக்கும் போது ஏராளமான எதிர்ப்புகள், பிரச்சனைகள், பிற கட்சியினரின் தொந்தரவுகள் உள்ளன. மதுரை அண்ணா நகர், அலங்காநல்லூர் கேட்டு கடை, அவுட் போஸ்ட் ஆகிய பகுதிகளில் பலமுறை பிறரால் தாக்கப்பட்டு இருக்கிறோம்.
 
இந்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்ததன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் சில காரணங்களை கூறி காவல்துறை பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சூழலில் எனது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் போதிய காவல்துறை பாதுகாப்பு அல்லது தனி பாதுகாப்பு காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர்," மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget