மேலும் அறிய

'நீங்களே சண்டை போட வைத்து விடுவீர்கள் போல’ - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் வேதனை

உச்ச நீதிமன்றத்தில் வழிபாட்டுத்தலங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றங்களில் விசாரணை செய்யக்கூடாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதிகள் நிஷா பானு , ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு.

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல, ஏன் இது போன்று வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாக மனு

ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பிப்ரவரி 4இல் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காண்பித்து அனுமதி மறுக்கப்பட்டது.  அதோடு காவல்துறை தரப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்னையை காரணம் காண்பித்து இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவை  பிறப்பித்துள்ளார். ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் இதே போல திருப்பரங்குன்றம் மலைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்  என தனியே பல்வேறு மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 

சண்டையிட வைத்து விடுவீர்கள் போல

 
இந்த வழக்குகள் நீதிபதிகள் நிஷா பானு ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், "இரு தரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோருவதாக சண்டையிட்டு வருவதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொணரலாம்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளவர்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டை போட வைத்து விடுவீர்கள் போல, ஏன் இது போன்று செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். மேலும் அங்கு உள்ளவர்கள் சண்டையிடாமல் இருந்தாலும் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்து சண்டையிட வைத்து விடுவீர்கள் போல என வேதனை தெரிவித்த நீதிபதிகள்.
 

தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்

 
அப்போது, வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்தவர்கள் தரப்பில், "வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் வழிபாட்டுத்தலங்கள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழிபாட்டுத்தலங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல் துறை குறித்து வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget