மேலும் அறிய

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப். கடந்த 2017ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபல நடிகையை மர்மநபர்கள் காரில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் இதில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அறிந்தனர். 

இதையடுத்து, இவர் மீது வழக்கு தொடரப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட திலீப்பிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடந்தது என்ன?

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி பாதிக்கப்பட்ட நடிகை படப்பிடிப்பு முடிந்து எர்ணாகுளம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அங்கமாலியில் உள்ள அத்தாணி அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த கும்பல் உள்ளே நுழைந்து நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நடிகை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். கேரளாவையே அதிரவைத்த இந்த சம்பவத்தில் நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர். இந்த வழக்கின் விசாரணையில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. 

6 பேர் குற்றவாளிகள்:

இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தது கேரள போலீஸ். பின்னர், அவர் ஜாமினில் வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று போதிய ஆதாரங்களுடன் திலீப் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் திலீப் 8வது குற்றவாளி ஆவார். 

பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு திலீப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 251 நபர்களிடம்  சாட்சியம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை என்னவென்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்தார். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் தொடர்ந்து சிறையிலே இருந்து வருகிறார்.

நன்றி சொன்ன திலீப்:

1992ம் ஆண்டு முதல் நடித்து வரும் திலீப் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகையுடன் இணைந்து சிஐடி மூசா, ரன்வே, டிவென்டி20 என பல படங்களில் நடித்துள்ளார். இந்த வழக்கின் பல்வேறு விசாரணை தகவல்களும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகும் தொடர்ந்து திலீப் நடித்து வருகிறார். தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக திலீப் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget