மேலும் அறிய

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !

கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பரவலாக இருந்துவருகிறது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மூன்றாவது அலைக்கு தயாராகி வருகிறதா என்னும் அச்சம் எழுந்துள்ளது.


மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !
கொரோனா இரண்டாவது அலை தனது தீவிரம் சற்று குறைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் மீண்டும் கொரோனா அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று தொலைகாட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது " நாடு முழுவதும் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இதற்கு ஏற்படும் செலவுகளை மத்திய அரசு ஏற்கும். இது வரை மாநில அரசுகள் வாங்கி வந்த 25% தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்" என பிரதமர் பேசினார்.

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !
 
இதனை தொடந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வரவேற்று ட்வீட் செய்துள்ளார், என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மூன்றாவது அலைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.  மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மட்டும் 365 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,684-ஆக உயர்ந்தது. அதே போல் இன்று 1348 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 58025 அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரையில் இறப்பு எண்ணிக்கை 988-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 9671 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று 3-வது அலை பரவ துவங்கினால், அது குழந்தைகளை அதிகளவிற்கு பாதிக்கும் நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மருந்துவமனையில், குழந்தைகளுக்குறிய சிகிச்சைக்கு பிரத்யேக வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை வழங்கி உடல்நிலை மாற்றங்களை கண்காணிக்கவும் "ஜீரோ டிலே வார்டு" CCC என்ற பெயரில் வார்டு துவங்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக 11 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு பிரிவில் தற்போது 2 குழந்தைகள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 
 

மூன்றாம் அலை ஆபத்துக்கு வழிவகுக்கிறதா மதுரை? கொரோனா அப்டேட் !
 
இரண்டாம் அலை கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை பிரிவிலயே இன்று முதல் சிகிச்சை துவங்கியது. அதே போல் குழந்தைகளுக்கு தேவைப்படும் தீவிர சிகிச்சைப்பிரிவுகள், பல்ஸ் ஆக்சிமீட்டர், இன்குபேட்டர், வெப்பமானி, நெபுலைசர் போன்ற கருவிகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் என மருத்துவக் கட்டமைப்புகளை இப்போதிருந்தே வலுப்படுத்த வேண்டும் எனவும், குழந்தை மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அதிகப்படுத்தி கிராமப்புற, வட்டார மருத்துவமனைககளிலும் குழந்தைகளுக்கான வார்டு பகுதிகளை உருவாக்கி மேம்படுத்தி தயார் நிலையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 

தலைப்பு செய்திகள்

பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் இத்தனை கோடியா?
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் இத்தனை கோடியா?
பழனி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தரை விசாரிக்க சிபிசிஐடி மீண்டும் நீதிமன்றத்தில் மனு!
பழனி நில மோசடி வழக்கு; பத்திர எழுத்தரை விசாரிக்க சிபிசிஐடி மீண்டும் நீதிமன்றத்தில் மனு!
முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget