மேலும் அறிய

Madurai Train Fire: லக்னோ ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் -  பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி

தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று முன்தினம் காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது.

மதுரை ரயில் விபத்து:

அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 9 பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர் மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர். 

இந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தீ விபத்து நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள்  இரு நாட்களாக  சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர்.
 
தீவிர விசாரணை:
 
இந்த தீ விபத்து தொடர்பாக தெற்கு சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி நேற்று காலை சட்ட விசாரணை நடத்தினார். முதற்கட்டமாக ரயில் தீ விபத்தில் காயமடைந்து  மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து ரயில் விபத்தின்போது ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய 5 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் இரு சமையல் உதவியாளர்களை தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

Madurai Train Fire: லக்னோ ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் -  பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி

 

இந்நிலையில் மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இரண்டாம் நாள் விசாரணையில் ரயில்வே நிலைய அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீயணைப்புத் துணைநர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

 

லக்னோ அதிகாரிகளிடமும் விசாரணை:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுத்ரி இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Madurai Train Fire: லக்னோ ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் -  பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி

நாகர்கோவிலில் காலியான சிலிண்டரை மீண்டும் நிரப்பி உள்ளனர், சிலிண்டர் வெடிப்பு தான் விபத்திற்கான பிரதான காரணம் என தெரியவந்துள்ளது, கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதனால் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch Video: முதல் சுற்றில் சொதப்பல்.. மூன்றாவது சுற்றில் முத்திரை.. கெத்துக்காட்டி தங்கத்தை தட்டித்தூக்கிய நீரஜ் சோப்ரா.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மூணாறு ட்ரிப் பிளான் பண்றீங்களா? மாங்குளம் செல்ல மிஸ் பண்ணாதீங்க.
மூணாறு ட்ரிப் பிளான் பண்றீங்களா? மாங்குளம் செல்ல மிஸ் பண்ணாதீங்க.
“திமுகவின் சிண்டிகேட் அரசியலுக்கு முடிவு வரும்” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன்  பேட்டி
“திமுகவின் சிண்டிகேட் அரசியலுக்கு முடிவு வரும்” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன்  பேட்டி
நத்தம் பிரச்சாரத்தில் சீமான் சவால்: “நோட்டுக்கு ஓட்டு நாட்டுக்கு வேட்டு” – கடும் விமர்சனம்
நத்தம் பிரச்சாரத்தில் சீமான் சவால்: “நோட்டுக்கு ஓட்டு நாட்டுக்கு வேட்டு” – கடும் விமர்சனம்
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Embed widget