மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா?
காரைக்குடி அருகே நிலம் விலைக்கு வாங்க வந்ததாகவும் அங்கிருந்த நபர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் ஒருவர் புரோக்கர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்குத் துணையாக வந்ததாக கூறினார்கள்
![காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா? Karaikudi police are conducting an intensive investigation into the money involved in the vehicle check காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/167b07932f8a1bf4e76b3cffcd8193b0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கார்_சோதனை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம், குன்றக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைக்குடி - குன்றக்குடி செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி நகர் அருகே கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தேதி சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு கார்களை மறித்து அவ்வழியாக ரோந்து சென்ற சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் ராஜ்குமார். மணிகண்டன். சேலம் மாவட்டம் குமார், சண்முக ஆனந்த், கோயம்புத்தூர் மாவட்டம் காமராஜ் திருச்சி மாவட்டம் மற்றும் சூரியகிஷோர் சென்னை சிட்வபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
![காரைக்குடியில் நிற்காமல் தப்பிச்சென்ற காரில் 5 கோடி ரூபாய் பிடிபட்டது...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/3ed1a8ef06b7ad0a2329fb3b2b160904_original.jpg)
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X*
மேலும் மேற்படி கார்களை தணிக்கை செய்ததில் இருவாகனங்களிலும் சீட்டுக்கு பின்புறம் ஜவுளிக்கடை பைகள் மற்றும் பேக்கில் 500 மற்றும் 2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 பேரிடமும் போலிசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பையில் சுமார் 5 கோடி பணம் இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் ராஜ்குமார் என்பவர் சேலத்தில் சிக்ஸ் சிக்மா ரெடி மிக்ஸ் கன்சர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் வைத்திருந்ததாகவும் காரைக்குடி அருகே நிலம் விலைக்கு வாங்க வந்ததாகவும் அங்கிருந்த நபர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் ஒருவர் புரோக்கர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்குத் துணையாக வந்ததாக கூறினார்கள்.
![காரைக்குடியில் காரில் சிக்கிய 5 கோடி பணம்- நிலம் வாங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/c91ecac6f1f26384735acb5cdb6358ee_original.jpg)
சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
பின்னர் காரைக்குடி வருமான வரித்துறை அலுவலர் மகேஸ்வரி என்பவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு மதுரை மண்டல வருமான வரித்துறை இயக்குநர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். குன்றக்குடி காவல்நிலைய ஆய்வாளர் தேவகி இப்பணம் சம்மந்தமாக மேல்நடவடிக்கை எடுக்க ஒரு அறிக்கை அளித்ததின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் 10 பைகளில் இருந்த பணத்தை கைப்பற்றினர். பின்பு ஸ்டாலின் வருமான வரித்துறை துணை இயக்குநர் தலைமையில் ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் முன்னிலையில் இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டதில் ரூபாய் 4 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் அனுப்பிய தனி அறிக்கையின் பேரில் பணத்தையும் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர்களையும் காரைக்குடியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுவருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion