Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
நயினார் நாகேந்திரனை அமித்ஷா டெல்லிக்கு அழைத்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த 5 மாதத்தில் நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் திவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய கணக்குப்படி பார்த்தால் ஆளும் திமுக தலைமையில் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணியாகவும், அதேபோல் தனித்துகளம் காணும் சீமான், விஜய் என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யுனிஸ்ட், முஸ்லீம் கட்சிகள் என பல கட்சிகள் இடம்பெறுள்ளது. இதனால் அந்த கூட்டணி வலுவான கூட்டணி என சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையனை என்டிஏ கூட்டணிக்கு கொண்டுவர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல டிடிவி தினகரனும் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக கூட்டணிக்கு தூதுவிட்டார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் அணியினரும் விரைவில் கட்சி தொடங்கி இருப்பதாகவும் விஜய் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் ஓபிஎஸ்-ஐ டெல்லிக்கு அழைத்து அமைதியாக இருங்கள் நான் பார்த்துகொள்கிறேன் என அமித் ஷா உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் அடுத்து அண்ணாமலை அழைத்து முக்கிய அசைமெண்ட் ஒன்றை கொடுத்துள்ளார் அமித்ஷா.
அதன் ஒரு பகுதியாக அண்ணாமலையும் டிடிவியை நேரில் சந்தித்து கூட்டணி வாங்க என்று உரிமையோடு அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி பரபரப்புக்கு மத்தியில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வர பாஜக தேசிய தலைமை உத்தரவு போட்டுள்ளது.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்ச்வார்த்தை நடத்தினார் நயினார் நாகேந்திரன்.
அந்த பேச்சுவார்த்தையில் பாமக, தேமுதிக தங்கள் அணிக்கு விரைவில் வருவார்கள் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும் மேலும் அமித்ஷா அடுத்த முறை தமிழகம் வரும் போது தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று ஈபிஎஸ் நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஈபிஎஸ்-ஐ சந்தித்து விட்டு வெளியில் வந்த நயினார், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாகவும் கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















