மேலும் அறிய

Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” - மாணிக்கம் தாகூர் பேட்டி

”தமிழகத்தில் சொத்து வரி உயர்வு வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி மட்டும் தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தார்” - கே.எஸ்.அழகிரி

காந்திஜியின் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
 
அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ”மதுரைக்கு வந்த ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மதுரை விமான நிலையம் என 2 பொய்களை கூறிவிட்டு சென்றுள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்க பணி நின்று விட்டதாகவும் அதற்கான மத்திய அரசு நிதி ஒதுக்கியதாகவும் கூறுவது கட்டுக்கதை. மதுரை விமான நிலைய குழு தலைவர் என்ற முறையில் உண்மையை கூறுகிறேன்.

Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” -  மாணிக்கம் தாகூர் பேட்டி
 
2019 ஆம் ஆண்டு வரை மதுரை விமான நிலைய ஓடுதளம் அண்டர் பாஸ் முறை இல்லாமல் செயல்படுத்த திட்டமிட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு வாரணாசி, மைசூர், மதுரை என மூன்று விமான நிலையங்களிலும் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அண்டர் பாஸ் முறையில் செயல்படுத்த இருப்பதினால் நிலம் அதிகம் தேவையில்லை என தமிழக அரசிற்கு 2020-ல் கூறினர்.
 
2022-ல் இதற்கான பட்ஜெட் அதிகரிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணி செய்ய வேண்டும் என்றும் பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது. அதன் விளைவாகத்தான் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறாமல் இருந்தது. தங்கள் மேல் இருந்த பழியை மாநில அரசு மீது வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மதுரை விமான நிலையத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. 24 மணி நேரம் சேவை இல்லாததால் சென்னையில் இருந்து மதுரைக்கு 6.30 மணி வரை தான் விமானம் இயக்கப்படுகிறது.  இரவு 9 மணிக்கு எல்லாம் மதுரை விமான நிலையம் பூட்டப்படுகிறது. 

Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” -  மாணிக்கம் தாகூர் பேட்டி
 
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் இதை இவர்கள் கவனத்தில் கொள்ளாமல் இந்த ஆண்டு டிசம்பர் வரை நீடித்தால் ஜனவரி மாதம் அதற்காக போராட்டம் நடத்துவோம்.

Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” -  மாணிக்கம் தாகூர் பேட்டி
 
மின் கட்டணம் உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு.?
 
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மக்களை பாதிக்கின்ற முடிவுகள் எங்கெல்லாம் எடுக்கப்படுகிறதோ அதை எதிர்ப்பதும்? அதற்காக எதிர்த்து குரல் கொடுப்பதும் காங்கிரஸ் கட்சி தான். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர். மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு முடிவுகள், யாருடைய ஆட்சியிலும் வந்தாலும் அதை தொடர்ந்து எதிர்ப்பது காங்கிரஸ் கட்சி தான்.

Madurai : ”அண்ணாமலை அளித்த தகவலால் ஜே.பி.நட்டா மானம் போனது” -  மாணிக்கம் தாகூர் பேட்டி
 
ராகுல் காந்தி நடைபயணம் ஜீரோவாக தான் இருக்கும் என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு.?
 
அண்ணாமலை பேசுவது எல்லாம் முன்னுக்கு பின் முரணான பேச்சு. அவர் கொடுத்த தவறான தகவலால் இன்றைக்கு ஜே.பி.நட்டாவின் மானம் போனது. அண்ணாமலையை பொறுத்தவரை தமிழக அரசியலில் தன்னைத்தானே ஒரு மிகப்பெரிய புரட்சியாளர் போல் காட்டிக் கொள்கிறார் அரசியல் பார்வையில் அவர் நகைச்சுவை நடிகராக தான் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.  மக்கள் பார்வையில் இருந்து உண்மையான மக்கள் பிரச்சினையே பேசுகிற ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர். அவர் நடை பயணத்திலேயே அவருக்கு எவ்வளவு ஆதரவு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணாமலை பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது." இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget