மேலும் அறிய

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!

தீத்தத் தொட்டியில் நூபர கங்கை தீர்த்தம் தெளித்து அழகரையும், கருப்பணையும் வேண்டிக்கிட்டு சம்பா தோசையை பிட்டு சாப்பிடுவார்கள்.

'பச்சரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம், நூபுர கங்கை தீர்த்தம்' இதையெல்லாம் பக்குவமாய் கலந்து நெய்யில் சுட்டு எடுப்பது தான் சம்பா தோசை. பழனிக்கு எப்படி பஞ்சாமிருதமோ, திருப்பதிக்கு எப்படி லட்டோ அப்படி தான் அழகர்கோயிலுக்கு சம்பா தோசை. ஹோல் பேமிலிக்கு ஒரு தோசை வாங்கினா போதும், பிரசாதம் சாப்ட்ட திருப்தி கிடைச்சிரும். அழகருக்கு அக்கார அடிசலும், இந்த சம்பா தோசையும் ரொம்பவும் பிடிக்கும். இதனால  மடப்பள்ளியில் சுந்தர் ராஜ பெருமாளுக்கு நெய்வேத்தியம் மடப்பள்ளியில் சிறப்பா செய்யப்படும். அவருக்கு செய்யும் சம்பா தோசை மட்டும் கிட்டத்தட்ட 3 அரை கிலோக்கு மேல இருக்கும்னு சொல்லப்படுகிறது.

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!
பெருமாளுக்கு பிடிச்ச சம்பா தோசை மக்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும் என அழகர்கோயில் நிர்வாகம் பிரசாத கூடத்தில் தனியாக செஞ்சு கோயில் வளாகத்திலேயே விற்பனை செய்றாங்க. கடந்தாண்டு மட்டும்  6 லட்சத்தி 25 ஆயிரம் சம்பா தோசைய கிட்டதட்ட 2 அரை கோடிக்கி விற்பனை செஞ்சுருக்காங்க. ஆனாலும் கடும் சிரமத்திற்கு இடையில்தான் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசாத உணவுக் கூடத்தை 70 லட்சத்திற்கு புனரமைக்கப்பட்டு கூடுதலாக பிரசாதம் செஞ்சுகிட்டு வாராங்க. 2 அடுப்பு இருந்த இடத்தில் 5 அடுப்புகள் இருக்கு. மாவு அறவைக்கு முழுமையா இயந்திரங்கள்.

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!
பிரசாத கூடத்தில் தோசையை தவிர தேன்குழல், அப்பம், லட்டு, புளியோதரை, சம்பா தோசை, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்களும் செய்யப்படுகிறது. எல்லாம் 10 ரூபாய்தான், சம்பா தோசை மட்டும் 40 ரூபாய். கோயில் உட்புரத்தில் ஸ்டால்கள் 3 எப்போதும் செயல்படும். திருவிழா காலத்தில் 1 ஸ்டால் எக்ஸ்ட்ரா செயல்படும்.  சம்பா தோசை பிரசாதம் மட்டுமில்ல அதற்கு பின்னாடி மிகப்பெரும் நம்பிக்கை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊர் சண்டை, உறவுச் சண்டை, பங்காளி சண்டை, மாமன் மச்சான் சண்டை, நண்பர்களுக்கு இடையேயான சண்டை என எதுவாக இருந்தாலும் கருப்பணசாமி வாசலில் தீர்த்துக்கிறாங்க. மலை உச்சியில் இருக்கும் ராக்காயி அம்மனின் நூபுர கங்கையில் தீர்த்தம் ஆடிய பின் பெருமாளையும், கருப்பணசாமியையும் வேண்டிக்கிட்டு சம்பா தோசையை ஆளுக்கு கொஞ்சம் பிச்சு சாப்பிட்டா எந்த சண்டையும் இல்லாம சேர்ந்துக்கிடுறாங்க.

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!
அதனால் சண்டையில் ஏசியது, பேசியது பலிச்சொல் என எதுவும் இல்லாம, காணாம போயிரும்னு நம்புராங்க. சம்பா தோசைக்கு தனி சுவை கோயில் தீர்த்தம்தான் என சமையலர்கள் சொல்றாங்க. ஆஹா, ஓ ஹோ சுவையாக இல்லாட்டியும் மிளகு, சீரகம், உளுந்து சுவையோட நெய் வாசனை தூக்கலா இருக்கும் சம்பா தோசை தனியான சுவை தான். அதனால கண்டிப்பா அழகர்கோயில் வந்தா சம்பா தோசை சுவைச்சு பார்க்கலாம்.

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!
 
"ஆலயங்களில் கோயில் கொண்ட தெய்வங்களுக்கு அன்னம், அபூவம் என்ற இரண்டு விதமாக சமைத்த பதார்தங்கள் நைவேத்யம் செய்யப்படுகிறது
 
 அன்னம் - வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சாத வகைகள். 
 
 அபூவம் - தேன்குழல், அதிரசம், அப்பம், வடை, முறுக்கு போன்ற பதன வகைகள்.
 
நான்கு திசைகளிலும் யானை போன்று நின்று காத்து வருகின்ற வேங்கடவன், திருவரங்கள், சௌரிராஜன் போன்ற எம்பெருமாள்களுக்கு தலைவன் யானை, உலகமேத்தும் தென் யானையாகிய அழகர்யானை. எனவே எந்த திருக்கோயிலிலும் இல்லாத வகையில் அன்னங்களில் உயர்ந்ததாகிய பாயசான்னம் என்று சொல்லப்படுகிற அக்கார அடிசலும், அவங்களில் அளவிலும், சுவையிலும் உயர்ந்ததாகிய புஷ்டாபூபம் என்று சொல்லப்படுகிற தோசையும் அழகருக்கு மட்டுமே உரியதாகிறது" - என பூஜகர்கள்  தெரிவிக்கின்றனர்.

Madurai: சங்கடம் தீர்க்கும் அழகர்கோயில் சம்பா தோசை.. பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து.. பக்தர்களின் நம்பிக்கை பண்டம்!
 
அதே போல் அழகர்கோயில் சுற்றுப்புற கிராம மக்களிடம் பேசினோம்...," வெளியூர் காரர்களுக்குதான் சம்பா தோசையை பலரும் கோயிலில் கொடுக்கும் உணவாக பார்க்கின்றனர். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் இதனை பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் சிறப்பு பிரசாதமாகதான் பார்ப்பார்கள். பல வருடமாக பிரச்னைகள் இருக்கும், அவர்கள் மன கசப்பு நீங்கி சேர வேண்டும் என்றால் உடனே சேர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இவரும் பல்வேறு பேச்சுக்களை பேசி ஏசி இருப்பார்கள். கோயில்களில் காசு வெட்டிப் போடுதல், மிளகாய் அறைத்தல், காணிக்கை முடிந்து போடுதல் என செய்துருப்பார்கள் அப்படியாக செய்திருந்தால் இவர் குடும்பமும் ராசி ஆக வேண்டும். அதற்கு தீத்தத் தொட்டியில் நூபர கங்கை தீர்த்தம் தெளித்து அழகரையும், கருப்பணையும் வேண்டிக்கிட்டு சம்பா தோசையை பிட்டு சாப்பிடுவார்கள். அப்போது அவர்களுக்குள் இருக்கும் எல்லா மனக் கசப்பும் தீர்ந்துவிடும். அதற்கு பின்புதான் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட கூட செல்வார்கள். அந்த அளவிற்கு சம்பா தோசையை மிக முக்கியமாக நினைக்கிறார்கள்" என்றார்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
மானாமதுரை முனியசாமி கல்வெட்டு: 300 வருட பழமையான மர்மம்.. வரி நீக்கிய நிலம் பற்றிய ரகசியம்!
மானாமதுரை முனியசாமி கல்வெட்டு: 300 வருட பழமையான மர்மம்.. வரி நீக்கிய நிலம் பற்றிய ரகசியம்!
நிதிஷ்குமார் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமிக்கும் - எச்சரித்த தமிழக முதல்வர் !
நிதிஷ்குமார் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமிக்கும் - எச்சரித்த தமிழக முதல்வர் !
போக்சோ சட்டம்: இளைஞருக்கு அதிர்ச்சி தீர்ப்பு ரத்து.. அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம் - மதுரை அமர்வு உத்தரவு !
போக்சோ சட்டம்: இளைஞருக்கு அதிர்ச்சி தீர்ப்பு ரத்து.. அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம் - மதுரை அமர்வு உத்தரவு !
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Embed widget