மேலும் அறிய

TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி! அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்னவானது? நனவுகளை கனவாக்கும் திமுகவா கனவுகளை நனவாக்க போகிறது? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’ என்பதைப் போலத்தான் திமுக ஆட்சியில் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அவற்றால் மக்களுக்கு 10 பைசா கூட பயனில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.
 
ஜனவரி 1 முதல் அமல்

தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தவிருந்த நிலையில், அவர்களை ஏமாற்றும் வகையில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அறிவித்தது. அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி 10ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டது. இவை அனைத்தையும் கடந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு அறிவித்தது. இந்த நாடகங்களையெல்லாம் நம்பி அரசு ஊழியர்களும் சில காலம் ஏமாந்திருந்தனர்.

ஆனால், திமுக அரசால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 65 நாள்கள் ஆகிவிட்டன. ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத இறுதியிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்ந்தவர்கள் ஆவர். திமுக அரசு கூறியவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருந்தால், கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு அத்திட்டத்தின்படி ஓய்வூதியப் பலன்களும், அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% ஓய்வூதியமும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை.

ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும்தான் காரணம்
 
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கு சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும்தான் காரணம் ஆகும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாததற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் அத்திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்படவில்லை என்பது மட்டும் தான். இது தான் அப்பட்டமான ஏமாற்று வேலையும், அரசு ஊழியர்களை முட்டாள்களாக்கும் செயலும் ஆகும்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்தில் அத்திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்ட திமுக அரசு நினைத்திருந்தால், அடுத்த ஒரு வாரத்தில் விதிகளை வகுத்திருக்க முடியும். அவ்வாறு வகுத்திருந்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வுக்காலப் பயன்களை வழங்கியிருக்க முடியும்.
 
ஏமாற்று நாடகம்
 
பிப்ரவரி மாத மத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட துணை மானியக் கோரிக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கச் செய்திருக்க முடியும். ஆனால், அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசு எள்ளளவும் இல்லை. அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக திமுக அரசால் நடத்தப்பட்ட ஏமாற்று நாடகம்தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு ஆகும்.

உண்மையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பதே ஏமாற்று வேலை தான். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களுடன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களை ஒப்பிட்டால் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும். ஆனால், மோசடியான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது என்றால் அது எந்த அளவுக்கு மோசடியான, அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் அரசாக இருக்கும் என்பதை அறியலாம்.

தமிழ்நாடு அரசு நினைத்தால் பழைய ஓய்வுதியத் திட்டத்தையே எந்த நிதிப் பங்களிப்பும்,  நிபந்தனைகளும் இல்லாமல் செயல்படுத்த முடியும். ஆனால், அதற்கே துப்பில்லாத திமுக அரசு தான் 2030&ஆம் ஆண்டில்  வானத்தை வில்லாய் வளைப்போம்; மணல் கயிராய் திரிப்போம்; பாறையில் இருந்து பாலைக் கறப்போம் என்று கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருக்கிறது. வாயால் வடை சுடுபவர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது; ஆனால், வடை மட்டுமின்றி அப்பளம், பாயசம், கூட்டு, பொறியல் என அனைத்தையும் வாயால் சுடும் முதலமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. வெறுங்கைகளால் முழம் போடும் முதலமைச்சரின் அறிவிப்புகளையெல்லாம் நகைச்சுவையாகத்தான் தமிழக மக்கள் பார்க்கின்றனர்.

எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது
 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவது, அரசு வேலைகளை வழங்குவது, தனியார் நிறுவனங்களில் 75% பணிகளை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றவை நனவாகக் கூடியத் திட்டங்கள் ஆகும். ஆனால், இந்த நனவுத் திட்டங்களையே செயல்படுத்தாமல் கனவுத் திட்டங்களாக மாற்றிய திமுக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து 2030ஆம் ஆண்டுக்குள் கனவுத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகக் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்துக்கு போவதாகக் கூறுவதற்கு ஒப்பானதாகும். தமிழ்நாட்டு மக்களை  சில நேரம் ஏமாற்ற முடியும்; ஆனால், எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது, இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் புகட்டுவார்கள்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும் - செல்லூர் ராஜு சாபம் !
Madurai ; வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும் - செல்லூர் ராஜு சாபம் !
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
DMK Rajiv Gandhi: பெண்ணிடம் தவறாக பேசினேனா? - ராஜீவ் காந்தி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
DMK Rajiv Gandhi: பெண்ணிடம் தவறாக பேசினேனா? - ராஜீவ் காந்தி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
​தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’
தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget