மேலும் அறிய

ஜி.எஸ்.டி எதிர்ப்பு: மத்திய அரசை எதிர்த்து போராடும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வேளாண் அமைப்பு!

விவசாயிகள் நிதியுதவி திட்டங்கள் குறித்த எங்கள் கோரிக்கையையும் வலியுறுத்துவோம். பணவீக்கத்தை மனதில் வைத்து மேலும் நிதி உதவிகளை அதிகரிக்க வேண்டும்" என்று ரெட்டி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் நிதி உதவியை அதிகரிப்பது, விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலைநகரில் டிசம்பர் 19 அன்று ஆர்எஸ்எஸ்-இணைந்த பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) விவசாயிகளின் கண்டனப் பேரணியை அறிவித்துள்ளது.

மாபெரும் கண்டனப் பேரணி

பிகேஎஸ்-இன் அகில இந்திய செயலாளர் கே சாய் ரெட்டி கூறுகையில், ”அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் நகரில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில், விவசாயிகளின் நிதி நிலைத்தன்மை மிக முக்கியமானது என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும் முடிவு செய்ததாக கூறினார். கூட்டத்தில் டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் மாபெரும் கண்டனப் பேரணியாக 'கிசான் கர்ஜனா பேரணி' நடத்த முடிவு செய்துள்ளோம், மேலும் விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசை நீக்கக் கோருகிறோம். விவசாயிகள் நிதியுதவி திட்டங்கள் குறித்த எங்கள் கோரிக்கையையும் வலியுறுத்துவோம். பணவீக்கத்தை மனதில் வைத்து மேலும் நிதி உதவிகளை அதிகரிக்க வேண்டும்" என்று ரெட்டி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஜி.எஸ்.டி எதிர்ப்பு: மத்திய அரசை எதிர்த்து போராடும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வேளாண் அமைப்பு!

பேரணி குறித்த விழிப்புணர்வு

பிரச்சினைகள் மற்றும் பேரணி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். பிகேஎஸ் பொதுச் செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா கூறுகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர்களின் நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்: யாரெல்லாம் வாடகைத்தாய் முறைமூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்? : மருத்துவர்கள் பதில்

ஜிஎஸ்டி-யை நீக்க வேண்டும்

"விவசாயத்தில் உள்ள இடுபொருட்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது," என்று அவர் கூறினார். BKS-ன் கோரிக்கைகளை விளக்கிய மிஸ்ரா, "விவசாயிகள் பல்வேறு விவசாய உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றனர். உற்பத்தியாளர்களாக இருந்தும் அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. எனவே அரசாங்கம் ஜிஎஸ்டியில் உள்ளீட்டு பங்கை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும், அல்லது அவர்களின் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்றார். 

ஜி.எஸ்.டி எதிர்ப்பு: மத்திய அரசை எதிர்த்து போராடும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வேளாண் அமைப்பு!

விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறவேண்டும்

"உற்பத்தி செலவைக் கருத்தில் கொண்டு பயிர்களின் லாபகரமான விலையின் அடிப்படையில் புதிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போதுள்ள MSP முறை குறைபாடுடையது" என்று அவர் கூறினார். விவசாயிகளின் MSP தொடர்பான பிரச்சினைகளை ஆராய மத்திய அரசு சமீபத்தில் ஒரு குழுவை நியமித்துள்ளது. ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ₹6,000 ஆக இருக்கும் PM-கிசான் சம்மன் நிதியை "பணவீக்கத்துடன் இணைத்து தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்" என்றும் அவர் கோரினார். உரம் மற்றும் யூரியா விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக திருப்பி விடப்படுவதாகக் கூறிய மிஸ்ரா, "உர மானியம் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட வேண்டும்" என்றார். அரசின் அலட்சியத்தாலும், விவசாயத்தில் லாபம் குறைந்ததாலும் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வழிகளைத் தேடி வருகின்றனர் என்றார். எனவே விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறாத வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் விவசாயிகளைப் பற்றி பேசுகிறது, அதே போல அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், எனவே விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.

தலைப்பு செய்திகள்

ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget