மேலும் அறிய

Data Protection: தனிநபர் தரவுகள் பாதுகாப்பு : விதிகளை மீறினால் நிறுவனங்களுக்கு ரூபாய் 500 கோடி அபராதம்..! புதிய மசோதா..

புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு 2022 மசோதாவை வெளியிட்டுள்ள மத்திய அரசு, மசோதா மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதன்முறையாக டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவை,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தனி நபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என வரையறை செய்யப்பட்டு இருந்தது.

புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா:

ஆனால், இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனி நபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுப்பதோடு,கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவில் 81 திருத்தங்களுடன் 12 பரிந்துரைகளை முன்வைத்தது. இதையடுத்து, அந்த மசோதாவை திரும்பப் பெற்ற மத்திய அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்வைத்துள்ள வரையறைக்கு உட்பட்டு புதிய மசோதா உருவாக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், பழைய மசோதாவை வாபஸ் பெற்ற மூன்று மாதஙகளிலேயே, டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளின் சட்டங்கள், அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியை ஆய்வுசெய்து, புதிய மசோதாவின் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த  மசோதா குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், விதிகளை வகுப்பதில் மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி வலியுறுத்தியுள்ளார்.

புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

தனிநபர் தரவுகளை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நியாயமாகவும், தனிநபர்களுக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனபதே, மசோதாவின் முதல் இரண்டு அம்சங்களாக உள்ளன. தனிநபர்களின்  தரவுகள் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, ரூ.15 கோடி அல்லது அதன் சர்வதேச வருவாயில் 4 சதவிகிதம் அபராதமாக விதிக்க, பழைய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை தற்போது ரூ.500 கோடியாக உயர்த்தி பரிந்துரைத்துள்ளது.

இந்த மசோதா குறித்து அடுத்த மாதம் 17ம் தேதி வரையில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET தேர்வால் முடக்கப்பட்ட Telegram... மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?
NEET தேர்வால் முடக்கப்பட்ட Telegram... மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?
விவசாயிகளுக்கு நிம்மதி! KCC கடனுக்கு புதிய காலக்கெடு விதிகள் அமல் தேதி அறிவிப்பு!
விவசாயிகளுக்கு நிம்மதி! KCC கடனுக்கு புதிய காலக்கெடு விதிகள் அமல் தேதி அறிவிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
Tata Tigor Facelift: மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
மாருதி டிசையருக்கு செக்.! அட்டகாசமான லுக்.. அசத்தலான அம்சங்களோடு வரும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 24-ம் தேதி(24.06.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Skoda Kodiaq RS: அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
அறிமுகத்திற்கு முன்னரே சம்பவம் செய்த ஸ்கோடா கோடியாக் RS.! 6 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது
Embed widget