மேலும் அறிய

Data Protection: தனிநபர் தரவுகள் பாதுகாப்பு : விதிகளை மீறினால் நிறுவனங்களுக்கு ரூபாய் 500 கோடி அபராதம்..! புதிய மசோதா..

புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு 2022 மசோதாவை வெளியிட்டுள்ள மத்திய அரசு, மசோதா மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதன்முறையாக டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவை,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தனி நபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என வரையறை செய்யப்பட்டு இருந்தது.

புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா:

ஆனால், இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனி நபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுப்பதோடு,கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவில் 81 திருத்தங்களுடன் 12 பரிந்துரைகளை முன்வைத்தது. இதையடுத்து, அந்த மசோதாவை திரும்பப் பெற்ற மத்திய அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்வைத்துள்ள வரையறைக்கு உட்பட்டு புதிய மசோதா உருவாக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், பழைய மசோதாவை வாபஸ் பெற்ற மூன்று மாதஙகளிலேயே, டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளின் சட்டங்கள், அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியை ஆய்வுசெய்து, புதிய மசோதாவின் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த  மசோதா குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், விதிகளை வகுப்பதில் மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி வலியுறுத்தியுள்ளார்.

புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

தனிநபர் தரவுகளை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நியாயமாகவும், தனிநபர்களுக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனபதே, மசோதாவின் முதல் இரண்டு அம்சங்களாக உள்ளன. தனிநபர்களின்  தரவுகள் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, ரூ.15 கோடி அல்லது அதன் சர்வதேச வருவாயில் 4 சதவிகிதம் அபராதமாக விதிக்க, பழைய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை தற்போது ரூ.500 கோடியாக உயர்த்தி பரிந்துரைத்துள்ளது.

இந்த மசோதா குறித்து அடுத்த மாதம் 17ம் தேதி வரையில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"இந்தியாவின் முதல் 'ஸ்டாப்-லெஸ்' டோல்கேட்!" – சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்க இனி வேலையில்லை
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
LPG Booking Rules: நினைத்த நேரத்தில் இனி சிலிண்டர் கிடைக்காது! நாளை முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்... முழு விவரம்
LPG Booking Rules: நினைத்த நேரத்தில் இனி சிலிண்டர் கிடைக்காது! நாளை முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்... முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
MRTS Metro Merger: வரப்போகுது புதிய வசதிகள்.. சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ இணைப்புக்கு விரைவில் இறுதி ஒப்புதல்!
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
Embed widget