மேலும் அறிய

கோவை : பரிதாபமாக உணவு தேடும் வனவிலங்குகள் ; குப்பைக்கிடங்கை அகற்ற கோரிக்கை..

வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள், குப்பைக்கிடங்கில் உணவு தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மலையடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள், கோவை மருதமலை அருகே வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் உணவு தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த மருதமலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கை அமைத்துள்ளது. இந்த ஊராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு  கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வனத்தில் இருந்து வெளியேறும் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு அந்தப் பகுதியில் யானைகளின் சாணத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குப்பைக் கிடங்கை அகற்றுமாறு வனத்துறையினர் சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். எனினும், வனத்துறையின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அங்கேயே குப்பைகளை கொட்டி வருகிறது.மேலும் அதிக அளவு குப்பைகள் சேரும்போது அதற்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்  மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான் மற்றும் யானைகள் குப்பை கிடங்கில் உணவு தேடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. குப்பைக் கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை மான் மற்றும் யானைகள் உண்பதால் அவற்றிற்கு உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மருதமலை வனப்பகுதி யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு அளிக்கிறது. இந்த பகுதிகளில் மான், சிறுத்தை, காட்டுமாடு, யானைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம். இங்கு வரும் யானைகளின் சாணங்களில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என வனத்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும், அவர்கள் அகற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். தற்போது மான் மற்றும் யானைகள் குப்பைக் கிடங்கில் உணவு சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைக் கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
coimbatore power cut: கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget