மேலும் அறிய

கோவை : தடுப்பூசி கையிருப்பு காலி - இன்று தடுப்பூசி பணிகளில் தொய்வு..

மக்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் உள்ள நிலையிலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வந்த நிலையில், மே இறுதி வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் பாதிப்பாக இருந்து வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் அதேவேளையில், பொதுமக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வந்தனர்.

கோவை : தடுப்பூசி கையிருப்பு காலி - இன்று தடுப்பூசி பணிகளில் தொய்வு..
 
கோவை மாவட்டத்திற்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் தமிழக அரசு 83 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் வழங்கியுள்ளது. இதில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 82 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 62 ஆயிரத்து 990 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20 ஆயிரத்து 800 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
 
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 189 தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட 36 பள்ளிகள் என 124 தடுப்பூசி மையங்களில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 48,000 தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான தடுப்பூசிகள் கையிருப்பு காலியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் கையிருப்பில் போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால் 7-ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  இதனால் ராஜவீதி, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்று ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

கோவை : தடுப்பூசி கையிருப்பு காலி - இன்று தடுப்பூசி பணிகளில் தொய்வு..
 
இந்த நிலையில் தடுப்பூசி வரத்து இல்லாததால், கோவை மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு காலியாகவே உள்ளது. இதனால் இன்றும் மூன்றாவது நாளாக கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீண்டும் தடுப்பூசிகள் வந்ததும், தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெறும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் உள்ள நிலையிலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget