மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த அகிலேஷ் (18) என்ற மாணவர் பி.. மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் அகிலேஷ் விடுதியில் இருந்த போது, அதே கல்லூரியில் அதே பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்துள்ளனர்.

அப்போது கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி அகிலேஷை எச்சரித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியில் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அறை எடுத்து தங்கியுள்ள நான்காம் ஆண்டு மாணவர் வெங்கடேஷ் என்பவரது அறைக்கு வரச் சொல்லியுள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்றபோது அகிலேஷ் தவிர மற்ற 12 மாணவர்களையும் எச்சரித்து கல்லூரிக்குள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அகிலேஷ் என்பவரை மட்டும் முத்துக்குமார், கோகுல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சூலூரில் ஆவின் டீக்கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரின் நண்பர் தனபால் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

அங்கு மூவரும் சேர்ந்து அகிலேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கியதாகவும், அதில் அகிலேஷுக்கு இடது நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அகிலேசின் வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்தாகவும், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துக்குமார், கோகுல், தனபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506 (1) மற்றும் தமிழ்நாடு ராக்கிங் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கல்லூரி மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் மற்றும் ஆவின் டீக்கடையில் பணியாற்றும் தனபால் ஆகிய 3 பேரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர்கள் மீது ராகிங் புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget