மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த அகிலேஷ் (18) என்ற மாணவர் பி.. மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் அகிலேஷ் விடுதியில் இருந்த போது, அதே கல்லூரியில் அதே பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்துள்ளனர்.

அப்போது கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி அகிலேஷை எச்சரித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியில் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அறை எடுத்து தங்கியுள்ள நான்காம் ஆண்டு மாணவர் வெங்கடேஷ் என்பவரது அறைக்கு வரச் சொல்லியுள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்றபோது அகிலேஷ் தவிர மற்ற 12 மாணவர்களையும் எச்சரித்து கல்லூரிக்குள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அகிலேஷ் என்பவரை மட்டும் முத்துக்குமார், கோகுல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சூலூரில் ஆவின் டீக்கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரின் நண்பர் தனபால் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

அங்கு மூவரும் சேர்ந்து அகிலேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கியதாகவும், அதில் அகிலேஷுக்கு இடது நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அகிலேசின் வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்தாகவும், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துக்குமார், கோகுல், தனபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506 (1) மற்றும் தமிழ்நாடு ராக்கிங் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கல்லூரி மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் மற்றும் ஆவின் டீக்கடையில் பணியாற்றும் தனபால் ஆகிய 3 பேரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர்கள் மீது ராகிங் புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
Embed widget