மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த அகிலேஷ் (18) என்ற மாணவர் பி.. மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் அகிலேஷ் விடுதியில் இருந்த போது, அதே கல்லூரியில் அதே பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்துள்ளனர்.

அப்போது கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி அகிலேஷை எச்சரித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியில் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அறை எடுத்து தங்கியுள்ள நான்காம் ஆண்டு மாணவர் வெங்கடேஷ் என்பவரது அறைக்கு வரச் சொல்லியுள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்றபோது அகிலேஷ் தவிர மற்ற 12 மாணவர்களையும் எச்சரித்து கல்லூரிக்குள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அகிலேஷ் என்பவரை மட்டும் முத்துக்குமார், கோகுல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சூலூரில் ஆவின் டீக்கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரின் நண்பர் தனபால் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

அங்கு மூவரும் சேர்ந்து அகிலேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கியதாகவும், அதில் அகிலேஷுக்கு இடது நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அகிலேசின் வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்தாகவும், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துக்குமார், கோகுல், தனபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506 (1) மற்றும் தமிழ்நாடு ராக்கிங் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கல்லூரி மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் மற்றும் ஆவின் டீக்கடையில் பணியாற்றும் தனபால் ஆகிய 3 பேரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர்கள் மீது ராகிங் புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Embed widget