மேலும் அறிய

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

தலைமுறை தலைமுறையாக காடுகளில் இவர்கள் வாழ்வதாலும், கொரோனா நெருக்கடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக புதியதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் உண்ண வழியின்றி தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புறங்கள் மற்றும் மலைக்கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும், 14 வகையான பொருட்களும் பேரூதவியாக அமைந்துள்ளன. ஆனால் ஏராளமான பழங்குடிகள் ரேசன் அட்டை இல்லாததால், அந்த உதவிகளை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர்.


ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

இதுகுறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் பேசுகையில், "கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட ஆனைமலைத் தொடர் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதியில் வாழும் 35  பழங்குடி கிராம மக்கள்  கோவிட் பெருந்தொற்றால் நேரிடையாகவும், மறைமுகமாகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர். அடர்ந்த வனத்திற்குள் உள்ள இக்கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை, போக்குவரத்து வசதி கிடையாது.  மின்சாரம் வசதியோ, மருத்துவ, பலசரக்கு கடை வசதிகள் இங்கு கிடையாது. இப்பகுதியானது ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் ஊரடங்கில் யாரும் எளிதில் பிற பகுதிகளுக்கு சென்று வர  முடியாது. 


ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

இங்கிருக்கும் அனைத்து கிராமங்களில் உள்ள மொத்த  குடும்பங்களில் சுமார்  10 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் அரசின் குடும்ப அட்டைகள் இல்லாமல் உள்ளன. குறிப்பாக சர்க்கார்பதி (5/27), நாகரூத்து (9/50), கூமாட்டி (7/37), எருமைப்பாறை (3/37), மாவடப்பு (12/120), குழிப்பட்டி (20/120), காட்டுப்பட்டி (8/36), கல்லார் (4/23) உடுமன் பாறை (3/36), திருமூர்த்தி நகர் (17 /110), கீழ் பூனாட்சி (4/45) காடம்பாறை (4/14) மற்றும் கோபால்பதி புது காலனி (7/23)  குடும்ப அட்டை இல்லாத நிலை உள்ளது. இது போன்ற நிலை ஆனைமலை தொடரில் நிலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில பழங்குடியின கிராமங்களில் 40 சதவீதம் வரை ரேசன் அட்டை இல்லாத நிலையும் உள்ளது.


ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

தலைமுறை தலைமுறையாக காடுகளில் இவர்கள் வாழ்வதாலும், கொரோனா நெருக்கடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக புதியதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இ சேவை முறையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பழங்குடி தனிப்பெண்கள் பலருக்கும் ரேசன்கார்டு பெற இயலாத நிலை உள்ளது.  


ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள பழங்குடிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பது ஒரு பெரிய தொகை. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் தமிழ்நாடு  அரசு பொருளாதாரத்தில் ஏழ்மையில் வாடும் மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் பிற பழங்குடிகளுக்கு தாயுள்ளத்தோடு உதவ வேண்டும். முறையாக கணக்கெடுத்து அரசின் உதவிகள் பெற ஏதுவாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக  குடும்ப அட்டை வழங்குவதோடு, கொரோனா நிவாரண உதவிப்பணமும், பொருட்களும் வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குரலற்ற சமூகமாக உள்ள பழங்குடிகள் மீது தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

பழங்குடியின கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், சிகிச்சைக்காக வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பரிசோதனை மருத்துவ உதவிகள் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவை பாஜக மையக்குழு கூட்டம்... தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த முக்கிய எச்சரிக்கை...
கோவை பாஜக மையக்குழு கூட்டம்... தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த முக்கிய எச்சரிக்கை...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
Embed widget