மேலும் அறிய

கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; இண்டர்போல் உதவியை நாடும் சிபிசிஐடி - காரணம் என்ன?

ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு பங்களாவில் 2017 ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த அக்கும்பல், சில மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர்  ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் விசாரணை துவங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோடநாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிபுணர் குழு கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்குவது குறித்து அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இண்டர்போல் உதவியுடன் விசாரணை

குறிப்பாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளதாகவும், இதனை இண்டர்போல் காவல் துறை உதவியுடன் விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன விபத்து குறித்து அந்த அறிக்கையில் உள்ளதால், இதுபோன்ற புலன் விசாரணை நடைபெறும் நேரத்தில் எதிரிகளுக்கு நிபுணர் குழு நகலை வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் காதர் வழக்கை ஜூலை மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், ”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 வது குற்றவாளியான ஜித்தின்ஜாய் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கோடநாடு பங்களாவை நீதிபதிகள் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என தாங்கள் கொடுத்திருந்த மனுவிற்கு புலன் விசாரணை நடைபெறும் போது கோடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள முடியாது எனவும், கோடநாடு பங்களாவில் முழு ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளியார் எனத் தெரியவரும்” எனத் தெரிவித்தார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Embed widget