மேலும் அறிய

கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்; இண்டர்போல் உதவியை நாடும் சிபிசிஐடி - காரணம் என்ன?

ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு பங்களாவில் 2017 ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த அக்கும்பல், சில மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல் துறையினர்  ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் விசாரணை துவங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோடநாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை நிபுணர் குழு கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்குவது குறித்து அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இண்டர்போல் உதவியுடன் விசாரணை

குறிப்பாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு 7 முறை வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளதாகவும், இதனை இண்டர்போல் காவல் துறை உதவியுடன் விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன விபத்து குறித்து அந்த அறிக்கையில் உள்ளதால், இதுபோன்ற புலன் விசாரணை நடைபெறும் நேரத்தில் எதிரிகளுக்கு நிபுணர் குழு நகலை வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் காதர் வழக்கை ஜூலை மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், ”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 வது குற்றவாளியான ஜித்தின்ஜாய் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கோடநாடு பங்களாவை நீதிபதிகள் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என தாங்கள் கொடுத்திருந்த மனுவிற்கு புலன் விசாரணை நடைபெறும் போது கோடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள முடியாது எனவும், கோடநாடு பங்களாவில் முழு ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளியார் எனத் தெரியவரும்” எனத் தெரிவித்தார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
மரணத்திலும் மனிதநேயம்… சிறுமியின் உறுப்பு தானம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget