மேலும் அறிய

’பெரியார் உணவகம் திறப்பதா?’ - உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணி அமைப்பினர் கைது

”பெரியார் பெயரில் உணவகம் நடத்துவதா?” எனக் கேட்டு கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள கண்ணார்பாளையத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் சூறையாடிய இந்து முன்னணி அமைப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கண்ணார்பாளையம் நால் ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை இன்று திறக்க இருந்தார். உணவகத்தை திறப்பதற்கான ஏற்பாடு  பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஒன்று ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ”பெரியார் பெயரில் உணவகம் நடத்துவதா?” எனக் கேட்டு கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த உணவகத்தின் டேபிள், மேசைகள், கண்ணாடி, பெயர் பலகை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

இதனிடையே அக்கும்பல் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த அருண் (21) என்பவருக்கு படுகாயமடைந்தார். கடையின் உரிமையாளர் பிரபாகரன் லேசான காயமடைந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அருண் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 36 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


’பெரியார் உணவகம் திறப்பதா?’ - உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணி அமைப்பினர் கைது

இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காரமடை காவல் துறையினர், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியார் பெயரில் உணவகம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தி கடையை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவி பாரதி, சரவணக்குமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பெரியார் பெயரில் திறக்கப்பட இருந்த உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் காரமடையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

பெரியார் பெயரில் திறக்கப்பட இருந்த உணவகம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி தாக்குதல் நடத்தியதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், “இந்து முன்னணி அமைப்பினர் கடையில் புகுந்து ‘இது எங்கள் கோட்டை. இங்கே எப்படி பெரியார் பெயரில் கடை தொடங்குவாய்?’ எனக் கேட்டு பிரபாகரன் அவரது மனைவி மற்றும் ஊழியர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பினரை கண்டித்து காரமடை பகுதியில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget