மேலும் அறிய

தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றிய நிலையில், கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.


தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

கோவை பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக மோகன் என்பவர், காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இவரது கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடையில் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில பிளைவுட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.


தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் கார் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோடாரியால் உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தியாகு என்ற இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரின் காரின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர்.


தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உப அமைப்பான சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழக - கேரள பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.. இதேபோல குனியமுத்தூர் சுப்பு லட்சுமி நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த பரத் என்பவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து தீப்பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வந்தவர்கள் தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.


தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

இதனிடையே சாய்பாபா கோவில் சன் ரைஸ் பர்னிச்சர் என்ற காம்ப்ளக்ஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று, நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த வாகனம் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இந்நிலையில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்த சாய்பாபா காலனி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து இரு சக்கர வாகனத்தை மீட்டனர். இரு சக்கர வாகனம் விபத்தி காரணமாக தீ பிடித்து எரிந்ததா அல்லது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: அதிரடி கண்காணிப்பில் போலீஸ் - கோவையில் நடப்பது என்ன?

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார். மேலும் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் வருபவர்களை நிறுத்தி பெயர்கள், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று கோவை நகர் பகுதியிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Embed widget