மேலும் அறிய

Coimbatore Clock Tower : புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கோவையின் அடையாளமான டவுன்ஹால் மணிக்கூண்டு..

கோவை நகராட்சி தலைவராக பதவி வகித்த ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார் நினைவாக 1928-ஆம் ஆண்டில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மணிக்கூண்டு கோவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. கோவை நகராட்சி தலைவராக பதவி வகித்த ஏ.டி. திருவேங்கடசாமி முதலியார் நினைவாக 1928-ஆம்  ஆண்டில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. பராமரிப்பு இன்றி இருந்த இந்த மணிக்கூண்டு கோபுரத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் முத்துசாமி, “டவுன்ஹால் மணிக்கூண்டு 1928ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதற்கு முன்பு விளக்குகள் எல்லாம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அனைவரும் நின்று பார்த்து செல்லும் வண்ணம் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்பாக அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது அடையாளமாக மட்டுமல்லாமல் பழைய கால கட்டிடங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக கூட அமைந்துள்ளது. இது போன்ற கட்டிடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த கடிகாரம் அன்றைக்கு லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பொருத்தப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் பல்வேறு புதிய வாய்ப்புகளை கொடுக்கிறார். முதலமைச்சர் ஒவ்வொரு துறையையும் கடமையாக எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

முன்பெல்லாம் முதலமைச்சர் மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளும் போது நாங்கள் சாதாரணமாக நினைத்தோம். ஆனால் நடைமுறையில் முதலமைச்சர் ஆய்வுக்காக ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அங்குள்ள பணிகள்  துரிதப்படுத்தப்படுகிறது.


Coimbatore Clock Tower : புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கோவையின் அடையாளமான டவுன்ஹால் மணிக்கூண்டு..

ஏற்கனவே வேகமாக நடைபெற்று வரும் பணிகள் முதலமைச்சர் வரும்போது, இன்னும் வேகமாக குறித்த காலத்தில் முடிக்கப்படுகிறது. கோவைக்கும் ஆய்வு மேற்கொள்ள விரைவில் தேதியை கொடுக்க இருக்கிறார். அப்போது கோவைக்கு மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டம் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஒரு முன் உதாரணமாக இருக்கும். குடிநீர் பிரச்சினைகள் போன்றவை எல்லாம் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள பிரச்சினைகள். எனவே அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் அந்த பணிகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

கோவை மாஸ்டர் பிளான் திட்ட பணிகளுக்கு தனியாக கமிட்டி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளானில் மொத்தமாக 135 இடங்கள் இடம் பெற்றுள்ளது. மாஸ்டர் பிளானில் 7 சதவிகிதமாக இருந்ததை தற்பொழுது 19% முடித்துள்ளோம், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 22 சதவிகிதம் எட்ட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் பேசி முடிவு எடுப்பார்கள். நிச்சயமாக அவர்களுடைய பிரச்சனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை அரசு நிச்சயமாக கவனிக்கும். தொண்டாமுத்தூர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினால் அதனை உடனடியாக ஒப்படைக்க முடியும் என்று கூறுகிறார்கள். நாளைய தினம் இது குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்கிறோம். சிறுவாணி அணை நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சரிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget