மேலும் அறிய

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க திட்டம்; செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தி சோதனை

யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் பாதைகள் செல்கின்றன. இதில் முதல் இரயில் பாதை 17 கி.மீ. தொலைவும், இரண்டாவது இரயில் பாதை 23 கி.மீ. தொலைவும் கொண்டது. இப்பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதேபோல கேரள மாநிலத்திற்குள் வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் அவ்வப்போது இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன.

இதனால் காட்டு யானைகள் இரயில் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதையில் வேகமாக இரயிலை ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் இரயில்களை வேகமாக இயக்கி வருவதால் இந்த விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The AI based surveillance mechanism set up by TN Forest Dept has started recording elephant movements on Railway tracks in pilot project mode in Madhukkarai at Coimbatore. The surveillance system has 12 towers fitted with both thermal and normal cameras, installed at strategic… pic.twitter.com/kfimcFZ2N3

— Supriya Sahu IAS (@supriyasahuias) November 1, 2023

">

இதன் ஒரு பகுதியாக யானை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் அடிக்கடி ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் 7.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளைச் செய்தது. அதன்படி இரண்டாவது பாதையில் மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டர் உயரமும், 18.3 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து யானைகள் ரயில் தண்டவாளத்திற்கு செல்லாமல் சுரங்கப்பாதை வழியாக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல துவங்கின. இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் சர்வலைன்ஸ்’ (ஏ.ஐ.எஸ்) எனும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் வழித்தடங்களில் 12 இ-சர்வைலன்ஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மொத்தம் 24 செயற்கை நுண்ணறிவு தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் வனத்துறையினர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள். யானை நடமாட்டம் குறித்து ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் அளித்து ரயிலின் வேகத்தை குறைக்க செய்வதால் யானைகள் உயிரிழப்பு தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தீயில் சிக்கிய கார், உயிர் தப்பிய டிரைவர்... கோவை அவிநாசி சாலையில் பரபரப்பு...
தீயில் சிக்கிய கார், உயிர் தப்பிய டிரைவர்... கோவை அவிநாசி சாலையில் பரபரப்பு...
Ramzan: ரம்ஜான் சிறப்பு தொழுகை... கோவையில் திரண்ட மக்கள்...
Ramzan: ரம்ஜான் சிறப்பு தொழுகை... கோவையில் திரண்ட மக்கள்...
100 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
100 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவையில் சைபர் குற்றம்: டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.40 லட்சம் மோசடி!
கோவையில் சைபர் குற்றம்: டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.40 லட்சம் மோசடி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Missile Stuns World: உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்
உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா, பிரிட்டன்
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Puducherry Assembly Election : வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாளே அவகாசம் – NDA வேட்பாளர்கள் அறிவிப்பு; இண்டியா கூட்டணியில் தொடரும் இழுபறி!
Duster 1.3 Turbo Petrol Review: ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
ஸ்டைல் மட்டும் போதுமா.? புதிய ரெனால்ட் டஸ்டர் 1.3 டர்போ பெட்ரோல் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? ரிவ்யூவ்
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Embed widget