மேலும் அறிய

கோவையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தாரா..?

விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அரசு பொருட்காட்சியில் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்கு சொந்தமான இடத்தில், அரசுப் பொருட்காட்சி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் வேளாண்மை துறை கண்காட்சி, கால்நடைத் துறை கண்காட்சி மற்றும் கோவை மாநகர காவல் துறையின் கண்காட்சி என பல அரசு துறைகளின் கண்காட்சிகள் நடந்து வருகின்றன. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் நேற்று பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 3: 45 மணியளவில் திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சென்று பார்க்கும் போது, காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் தோட்டாக்கள் துளைத்த நிலையில் ரத்தக் காயங்களுடன் அரங்கில் இருந்து வெளியே வந்துள்ளார். காவலர் இரத்தம் வடிய வருவதை கண்ட கண்காட்சியில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரசுப் பொருட்காட்சி வளாகத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த காயங்களுடன் இருந்த காவலர் காளிமுத்துவை, பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துப்பாக்கி குண்டு வெடித்த கண்காட்சி அரங்கை, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதேபோல தடவியல் காவல் துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் காளிமுத்து, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காவலர் காளிமுத்து கடன் பிரச்சனை காரணமாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பந்தயசாலை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலர் காளிமுத்து ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"திமுக எங்களை நிர்பந்திக்க முடியாது" - தொகுதி பங்கீடு சர்ச்சை குறித்து முத்தரசன் விளக்கம்...
“யூத் வெற்றி கொண்டாட்டம் – கென் கருணாஸ் பேசும் அதிர்ச்சி, சிம்பு பாராட்டு!”
“யூத் வெற்றி கொண்டாட்டம் – கென் கருணாஸ் பேசும் அதிர்ச்சி, சிம்பு பாராட்டு!”
”தேர்தல் வந்தால் திமுக அவுட் – NDA ஆட்சி இன்” - மேட்டுப்பாளையத்தில் எல்.முருகன் பரபரப்பு பேட்டி
”தேர்தல் வந்தால் திமுக அவுட் – NDA ஆட்சி இன்” - மேட்டுப்பாளையத்தில் எல்.முருகன் பரபரப்பு பேட்டி
மலை ரயில் டிக்கெட் சர்ச்சை – ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்த ஊழியர்
மலை ரயில் டிக்கெட் சர்ச்சை – ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்த ஊழியர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Trump Iran War: ’’எங்களுக்கே கெடுவா? எல்லாத்தையும் தரைமட்டம் ஆக்கிடுவோம்’’ அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி- மூளும் போர் பதற்றம்
Trump Iran War: ’’எங்களுக்கே கெடுவா? எல்லாத்தையும் தரைமட்டம் ஆக்கிடுவோம்’’ அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி- மூளும் போர் பதற்றம்
Velmurugan: வெளியேறினார் வேல்முருகன்.. திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி அவுட்!
Velmurugan: வெளியேறினார் வேல்முருகன்.. திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி அவுட்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Sarath Kumar: பாஜக-வில் இருந்து பல்டி அடிக்கிறாரா சரத்குமார்? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!
Sarath Kumar: பாஜக-வில் இருந்து பல்டி அடிக்கிறாரா சரத்குமார்? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!
Trump Iran War: ஈரானுக்கு 48 மணி நேர கெடு.. அடித்து நொறுக்குவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை!
Trump Iran War: ஈரானுக்கு 48 மணி நேர கெடு.. அடித்து நொறுக்குவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை!
Aadhav Arjuna: கரூர் சம்பவம் ஜனநாயகன் ஷூட்டிங்கா? - ஆதவ் அர்ஜூனா போட்டுடைத்த உண்மை!
Aadhav Arjuna: கரூர் சம்பவம் ஜனநாயகன் ஷூட்டிங்கா? - ஆதவ் அர்ஜூனா போட்டுடைத்த உண்மை!
Embed widget