மேலும் அறிய

நீலகிரி: மலைப்பாதையில் காரை தாக்கிய காட்டு யானை - உயிர் தப்பிய பயணிகள்

ஆத்திரமடைந்த காட்டு யானை அந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலை  பாதையில் ஒற்றைக் காட்டு யானை காரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் உலா:

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. அதேபோல மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

இதனால் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் அதிக அளவிலான வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் பகல் நேரங்களிலேயே அதிகரித்து காணப்படுகிறது. மலைப்பாதைகளில் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருகின்றன. இதனால் காட்டு யானைகளை வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.


நீலகிரி: மலைப்பாதையில் காரை தாக்கிய காட்டு யானை -  உயிர் தப்பிய பயணிகள்

உயிர் தப்பிய பயணிகள்:

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனிடையே மேல் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றனர். அப்போது திடீரென ஒற்றை காட்டு யானை மலைப்பாதையில் உலா வந்தது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் காரை அந்த ஒற்றை யானை வழிமறித்து நின்றதி. இதனால் அச்சம் அடைந்த காரில் பயணித்தவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இரண்டு பக்கங்களிலும் நின்றிருந்த வாகன ஓட்டிகள் யானையை விரட்ட கூச்சல் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை அந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர்.

யானைகள் நடமாட்டம்:

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கனவே பேருந்து கண்ணாடியை உடைத்தது குறிப்பிடத்தக்கது. யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட வேண்டுமெனவும், வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கோத்தகிரி வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget