மேலும் அறிய

நீலகிரி: மலைப்பாதையில் காரை தாக்கிய காட்டு யானை - உயிர் தப்பிய பயணிகள்

ஆத்திரமடைந்த காட்டு யானை அந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலை  பாதையில் ஒற்றைக் காட்டு யானை காரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் உலா:

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மலை மாவட்டமாக இருந்து வருகிறது. பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் வனப்பகுதிகள், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. அதேபோல மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

இதனால் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் அதிக அளவிலான வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் பகல் நேரங்களிலேயே அதிகரித்து காணப்படுகிறது. மலைப்பாதைகளில் அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருகின்றன. இதனால் காட்டு யானைகளை வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.


நீலகிரி: மலைப்பாதையில் காரை தாக்கிய காட்டு யானை -  உயிர் தப்பிய பயணிகள்

உயிர் தப்பிய பயணிகள்:

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலை பாதையில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனிடையே மேல் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றனர். அப்போது திடீரென ஒற்றை காட்டு யானை மலைப்பாதையில் உலா வந்தது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் காரை அந்த ஒற்றை யானை வழிமறித்து நின்றதி. இதனால் அச்சம் அடைந்த காரில் பயணித்தவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இரண்டு பக்கங்களிலும் நின்றிருந்த வாகன ஓட்டிகள் யானையை விரட்ட கூச்சல் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை அந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு தப்பி ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்தனர்.

யானைகள் நடமாட்டம்:

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்தட்டப் பள்ளம் பகுதியில் காட்டு யானை ஏற்கனவே பேருந்து கண்ணாடியை உடைத்தது குறிப்பிடத்தக்கது. யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட வேண்டுமெனவும், வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கோத்தகிரி வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget