மேலும் அறிய

குறைந்த விலையில் ஆக்சிஜென் செறிவூட்டிகள் : மரணங்களைத் தடுக்க முன்வந்த இளம் பொறியாளர்கள்..

இந்த கருவியின் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 1.25 லட்சம் ஆகும். இதை நாங்கள் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு எளிமையான முறையில் வடிவமைத்து உள்ளதால் ஒரு கருவியை 40,000 ரூபாயில் உற்பத்தி செய்ய முடியும் .

கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு பொருட்களை கொண்டு குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் இரு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் ஆக்சிஜென் செறிவூட்டிகள் : மரணங்களைத் தடுக்க முன்வந்த இளம் பொறியாளர்கள்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சிநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் குமார் (29) மற்றும் அனிஷ் மேத்யூ (29). இதில் அனிஷ் மேத்யூ நெதர்லாந்து நாட்டில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை 2015-ஆம் ஆண்டில் முடித்துள்ளார் . நரேஷ் குமார் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் படிப்பினை படித்துள்ளார் . இந்திய காங்கிரஸ் மாணவர் படையில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பில் அங்கம் வகிக்கும் இந்த இரு இளைஞர்கள், ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழ் நாட்டில் தற்பொழுது கொரோனா இரண்டாம் ஆலை மிகவும் தீவிரம் அடைந்து , மூன்றாம் அலையாக மாறும் சூழ்நிலை நிலவி வருவதாலும், கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதால், சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் வருகின்ற காலகட்டத்தில், குறிப்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புதியதாக நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத அளவிற்கு நோயாளிகள் நிரம்பி வழிகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க  தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் தோறும் கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.

நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்ட அனிஷ் மற்றும் நரேஷ் , வெளிநாட்டிலிருந்து அதிக செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்வதை தவிர்க்க  குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களை கொண்டு ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

குறைந்த விலையில் ஆக்சிஜென் செறிவூட்டிகள் : மரணங்களைத் தடுக்க முன்வந்த இளம் பொறியாளர்கள்..

அதன்படி காற்றில் உள்ள 21 சதவீதம் ஆக்சிஜனை ஜியோ லைட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து எடுத்து அதனை ஒரு குடுவையில் சேமித்து வைக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டு பொருட்களை கொண்டு 40,000 ரூபாயில் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற வீதத்தில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் படைத்த ஆக்சிஜென் செறிவூட்டி இயந்திரத்தை தயாரித்துள்ளனர். ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேசிய அனிஷ் “இந்த கருவியின் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 1.25 லட்சம் ஆகும். இதை நாங்கள் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு எளிமையான முறையில் வடிவமைத்து உள்ளதால் ஒரு கருவியை 40,000 ரூபாயில் உற்பத்தி செய்ய முடியும் .

குறைந்த விலையில் ஆக்சிஜென் செறிவூட்டிகள் : மரணங்களைத் தடுக்க முன்வந்த இளம் பொறியாளர்கள்..

கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, எங்களுடைய இந்த இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல் முறையை விளக்கியுள்ளோம் . இதனைத் தொடர்ந்து இந்த கருவியினை  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததோடு,  எங்களின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினார். விரைவில் எங்களது கருவியை ஆய்வுக்கு உட்படுத்தி தமிழக அரசிடம் இருந்து எங்களது கருவியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உபகாரணமாக மாற்றுவதுற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் உடனடியாக எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் .

குறைந்த விலையில் ஆக்சிஜென் செறிவூட்டிகள் : மரணங்களைத் தடுக்க முன்வந்த இளம் பொறியாளர்கள்..

தற்போது இந்த கருவியை வடிவமைக்கும் உதிரிபாகங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் , அரசு இதில் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை கிடைக்கும்படி செய்தால், நாள் ஒன்றுக்கு 10 கருவிகள் வரையிலும்  எங்களால் வெற்றிகரமாக வடிவமைக்க முடியும். இதனால் ஆக்சிஜென் பற்றாக்குறையால் நிகழும் மரணங்களையும் பெரும் அளவில் தவிர்க்கலாம்” என்று தெரிவித்தார் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget