மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலையில் இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கூறினார்

மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைத்து ஊரடங்கை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் - இது வரை 1100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - 1000க்கும் மேற்பட்ட விதிகளை மீறி வணிக நிறுவனங்கள் சீல் வைப்பு மற்றும் அபராதம் விதிப்பு- மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

கொரோனா பரவலையடுத்து தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் சோதனை சாவடிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்திளாயர்களிடம் பேட்டியளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ‛‛திருவண்ணாமலை மாவட்டத்தில் 1900 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர்,போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மாவட்டம் முழுவதும் 16 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து வணிக நிறுவனங்களின் விதிமீறல்கள் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக 3 கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி ஊரடங்கை தீவிரமாக நடைமுறை செய்து வருவதாகவும், இது வரை 1000க்கும் மேற்பட்ட விதிமீறி வணிக நிறுவனங்களுக்கு அபராதம்,கடைகளை மூடி சீல் வைத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

 

மேலும் ஊரடங்கை மீறி பொது வெளியில் சுற்றி திரிந்த 1100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பொது வெளியில் சுற்றிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் பற்றி தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் முககவசம் மற்றும் பொது வெளியில் சமூக இடைவெளி,பொது வெளியில் நடமாட்டத்தினை பொது மக்கள் தவிர்த்தால் மாவட்டத்தில் கொரோன தாக்கம் வெகு விரைவில் குறையும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைப்பு

தொடர்ந்து வெளியூர்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நிறைய பேர் வருகை தருவதால் சோதனை சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவையற்ற வாகன புழக்கத்தை தவிர்க்கவும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசார் முடிவுசெய்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். விதிகளை மீறி பயணிப்பவர்களை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.,யின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நேரடியாக எஸ்.பி., களமிறங்கியதால், போலீசாரும் அலர்ட் ஆகியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget