மேலும் அறிய

ஆளுநரை விமர்சிப்பது தனி மனித தாக்குதல் - கிருஷ்ணசாமி

பெரியாரை ஒட்டுமொத்தமாக குறை கூற முடியாது அதே சமயத்தில் மொத்தத்தில் அவர்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார் என்பது கூற முடியாது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆளுநரை விமர்சிப்பது ஒரு தனி மனித தாக்குதல், இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ; 

தமிழர்களின் முக்கியமான அடையாளமான பொங்கல் விழா விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற போகி பண்டிகையில் பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் , டயர் போன்ற பொருட்களை எரிப்பதால் நகரங்களில் மாசு ஏற்படும் ஆபத்து இருப்பதால், தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் டயர்,  பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

நாங்களும் சாலையில் இறங்கி போராடுவோம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மக்கள் போராடும் நிலைமை ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசு காலம் காக்காமல் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் நாங்களும் சாலையில் இறங்கி போராடும் நிலைமை ஏற்படும்.

மாஞ்சோலை பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் உடனடியாக  ஏற்கனவே கோவில் மாவட்டத்தில் 133 மலைவாழ் கிராமங்களும் பாதிக்கும் அளவு மக்களை வெளியேற்றி போராட்டம் நடைபெற்றது. சுற்றுச் சூழலை காரணம் காட்டி மலைவாழ் மக்களின் வெளியேற்றுவது முடியாது இது ஒரு தவறான நடவடிக்கை, மாஞ்சோலை வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தி கூறுகிறோம், 

பள்ளி, பொது இடங்கள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகிறது, அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் எந்த ஒரு பெண் தனியாக பாதுகாப்பு நடந்து செல்கிறாரோ அதுதான் முழுமையான சுதந்திர பெற்ற நாடுகள் காந்தி கூறியது போல் தமிழகம் இல்லை, இதை அனைத்தையும் எதிர்த்து பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக இருந்தால் புலன் விசாரணையின் போது ஏன் ஒரு நபர் இரண்டு நம்பர் என்று கூறவேண்டும், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் திமுக அரசு நடந்து கொண்டது சிறிதும் சரியில்லை, குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் யார் அந்த சார் என்று கூறும் பொழுது புலன் விசாரணை பெரிய போகிறது ஆனால் ஏன் தமிழக அரசு இந்த விவகாரத்தில் படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாங்கள் எதற்காக போராடுகிறோம் என்று ஜனநாயக முறையாக மக்களுக்கு சென்று அடைய முடியாமல் காவல்துறையினர் அனுமதி மறுக்கிறார்கள், எங்களுக்கான ஒரே வழி, ஆளுநர் இடத்தில் மனு கொடுப்பதுதான், திமுக ஓனர் நினைத்தால் மறுநாளே போராட்டத்தில் அனுமதி பெற்று போராடுகிறார்கள் இது எந்த விதத்தில் ஜனநாயகம், ஜனநாயகம் என்பது மாற்றுக்கருத்து உள்ளது தான் அந்த அடிப்படையில் நாங்கள் விளக்கத்தை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம், காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் எதுவாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக முறையாக அனுமதி வழங்க வேண்டும், இந்த வழக்கின் தீர்வு ஜனவரி மாதம் முதலாம் தேதி நல்ல தீர்ப்பு வரும், 

எதிர்க்கட்சியாக இருக்கும் போது பொங்கல் தொகுப்பு ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் திமுக தான், 1330 அளவிற்கு கொடுக்க வந்துவிட்டார்கள் இதில் தமிழக மக்களை ஒரு ஏமாற்றுவதற்கு தான் சமம் என்று கூற முடியும், 

போக்குவரத்து துறை பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களே பல லட்சம் பேரு உள்ளார்கள், மிகக் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதிய  பணம் இதுவரை கிடைக்கவில்லை, ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்,

பெரியார் சமூக நீதிக்காக போராடியுள்ளார்  தலைவர்கள் சமூகநீதி பொருளாதாரம் உள்ளிட்டவைகளுக்காக போராடினர். ஆக பெரியாரை ஒட்டுமொத்தமாக குறை கூற முடியாது அதே சமயத்தில் மொத்தத்தில் அவர்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார் என்பது கூற முடியாது,

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒன்று கூறுகிறார்கள் உடனே மாற்றி பேசுகிறார்கள், உலக தமிழக மக்களிடம் உள்ளத்தை மூடி மறைக்க முடியாது, ஆளுநர் மீது அவதூர்பேரத்தில் குற்றச்சாட்டு வைத்து பரப்புகிறார்கள், அவர் கேட்டது தேசிய பற்று முக்கியம் என்பதால் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறியது தவறல்ல, 

ஆளுநரை ஆர் எஸ் பாரதி கேஷுவல் லேபர் என்று கூறுகிறார் இது நியாயமல்ல, ஒரு தனி நபர் எந்த காரணத்தை கொண்டு காயப்படுத்தக் கூடாது, நேரடி ஒளிபரப்பு விஷயத்தில் சட்ட மன்றத்தை பார்க்கப்படும் இல்லாமல் இவர்கள் ஒளிபரப்பு எதிர்க்கட்சியின் ஒளிபரப்பை மறைப்பது நியாயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க..  அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க.. அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காவல்துறையின் குரூரப் போக்கு" தொடர் கதையாகும் லாக்-அப் மரணங்கள்.. கொதித்தெழுந்த பாஜக
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
Bank Holidays July: பாதி மாசம் லீவு தான் - வங்கி வேலைகளை செய்வது எப்படி? ஜுலை மாத விடுமுறை லிஸ்ட்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் லஞ்சம்: ரத்தக்கறை துவைக்க பணம், அதிர்ச்சி வீடியோ வெளியீடு!
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க..  அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
லவ்வர் படத்தில் நடிச்சதுக்காக திட்டுறாங்க.. அதுக்கு நான்தான் காரணமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
இன்ஜினியர் பரிதாபங்கள்.. 90 டிகிரியில் கட்டப்பட்ட பிரிட்ஜ்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
மோசமாக கட்டப்பட்ட பிரிட்ஜ்.. வைரலான போட்டோ.. தூக்கி அடிக்கப்பட்ட இன்ஜினியர்கள்!
சூர்யா - ஜோதிகாவின் ரொமான்டிக் டூர்.. எந்த நாடு தெரியுமா.. அழகான நாட்களாக இருக்கிறதாம்
சூர்யா - ஜோதிகாவின் ரொமான்டிக் டூர்.. எந்த நாடு தெரியுமா.. அழகான நாட்களாக இருக்கிறதாம்
Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்
Upcoming Hybrid Cars: டீசல், பெட்ரோல் கதை ஓவர்..! ஹைப்ரிட் ஃபீவர் பத்திக்கிச்சு, முறுக்கிட்டு வரும் கார் மாடல்கள்
Embed widget