மேலும் அறிய

கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் பேசிய கருத்து - அமைச்சர் சேகர்பாபு ரியாக்‌ஷன் என்ன?

கரூர் சம்பவத்திற்கு அனைவருக்கும் பொறுப்புள்ளது என நடிகர் அஜித்குமார் பேசியது குறித்தான கேள்விக்கு , நடிகர் அஜித்குமாரின் பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி துவக்க விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தகவல் பெட்டியின் சேவையை தொடங்கி வைத்தார். உடன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டிகள் அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அதில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் விவரங்கள் ; 

1. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்

2. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

3. திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

4. மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்

5. காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில்

6. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்

7. பேரூர் அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில்

8. திருவண்ணாமலை திருக்கோயில் அருள்மிகு அருணாச்சலேசுவரர்

9. சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில்

10. புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

உள்ளிட்ட 10 கோயில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியில் இருக்கும் அம்சங்கள் ; 

1. அருகே உள்ள திருக்கோவில்கள்

2. திருக்கோயில் வரலாறு

3. திருக்கோவில் திருமண மண்டபம் 

4. திருக்கோவில் தகவல்

5. சுற்றுலா தலங்கள்

6. புராதான சின்னங்கள்

7. நூலகம் 

8. அரசு அருங்காட்சியகம்

9. பூங்காக்கள்

உள்ளிட்ட அம்சங்கள் இந்த தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ; 

பக்தர்கள் நலனுக்காக வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ஏற்ப புதிய திட்டங்கள் இந்த துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. திருக்கோயில் பல்வேறு பதிவேடுகள் சுமார் 4 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்து கணிணிமயத்தில் கொண்டு வந்துள்ளோம்.திருக்கோயில்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஊழியர்கள் செயல்பாடுகள் மற்றும் பக்தர்கள் அத்து மீறலில் ஈடுப்பட்டால் அதனை கண்காணித்து வருகிறோம்.விக்கிரங்கள் பாதுகாப்பிற்காக 1800 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து பிரதான கோயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கோயில் நிலங்கள் அனைத்தும் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்து 381.19 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் எல்லை கற்கள் நிறுவப்பட்டு உள்ளது. வாடகை செலுத்துவது உள்ளிட்ட திருக்கோயில் வருமானங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் கணிணி மயமாக்கப்பட்டு உள்ளது.

கோயில் மடங்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் என்ன தயக்கம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறித்தான கேள்விக்கு ; 

நீதிமன்றம் என்ன வழிகாட்டு நெறிமுறைகளை கூறுகிறதோ அதை பின்பற்ற துறை தயாராக இருக்கிறது எனவும் ஒளிவு மறைவு எதுவும் இல்லை, துறையை பொறுத்த வரை திறந்த புத்தகமாக செயல்படுகிறோம்.

தமிழகத்தில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு ; 

பிரித்து ஆளும் தந்திரத்தை கையில் எடுத்து, இனத்தால், மொழியால், மக்களை பிளவுப்படுத்துகின்ற அரசு உலகத்தில் இருக்கிறது என்றால் அதில் முதல் பரிசு ஒன்றிய அரசுக்கு தரலாம். இந்த மண் திராவிட மண் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற தத்துவத்தின்படி ஆட்சி செய்கின்ற முதலமைச்சர் ஆளுகின்ற மண்ணில் எடுபடாது எனவும் வட இந்தியர்களை நாங்கள் சகோதரத்தோடு நடத்துகிறோம். வட இந்தியர்களை வேற்று கண்ணோடு பார்க்கவில்லை அவர்களும் மனிதர்கள் அவர்களும் எங்களைச் சார்ந்தவர்கள் எங்கள் வாழ்க்கை நடைமுறையோடு ஒட்டி பிணைந்து இருக்கிறார்கள் அதனால் அதில் பிளவுப்படுத்தி திமுக எதிர்ப்பு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்க கூடிய பாஜகவும் பிரதமர் மோடியின் முயற்சியும் தமிழகத்தில் எடுபடாது.திமுக சார்பாக தான் நான் இந்த பதிலை சொல்கிறேன். மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இந்த கருத்தை சொல்கிறேன். திமுக மாவட்ட செயலாளராக உள்ள என்னுடைய கருத்து கட்சியை ஒட்டிய கருத்தாக தான் இருக்கும்.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு ; 

அதனை எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேளுங்கள் இல்லை, செங்கோட்டையனிடம் கேளுங்கள். இன்று செங்கோட்டையன் பதிலை சொல்வார் எனக் கூறியிருக்கிறார். எடப்பாடி அதிதீவிரமான அற்புதமான, ராஜதந்திரமான , நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக கரையான் வந்து புற்று அரித்து கொண்டு இருப்பது போல இன்றைக்கு அதிமுகவை அவர் அரிந்து கொண்டு பாஜகவை வலுவாக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.  

அதை உண்மையான அதிமுக தொண்டர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் எனவும் முதல்வர் கரத்தை மேலும் பலம் பொருத்தவும் களத்தை மேலும் பல மடங்கு பலப்படுத்தவும் அனைவரும் வருவார்கள்.

கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல , அனைவருக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என நடிகர் அஜித்குமார் பேசியது குறித்தான கேள்விக்கு ; 

அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை என பதில் அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Avatar Fire and Ash Review : அவதார் படத்தைப் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன இயக்குநர் ராஜமெளலி
Embed widget