மேலும் அறிய

World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

பிற மாவட்டங்களை விட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது . இத்தகைய சூழ்நிலையில் மரங்கள் மற்றும் காடுகள் வளர்த்தல் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது .

பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும் நமது பூமியை போல் மனிதர்கள் மற்றும் அனைத்து வகையான ஜீவராசிகள் வாழ்வதற்கு தகுதியான கோளினை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.  


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

நமது பூமி நிலம் , நீர் , நெருப்பு , ஆகாயம் மற்றும் காற்று ஆகிய  பஞ்சபூதங்களை அடக்கிய மாபெரும் பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கி இருந்தாலும் நமது பூவின் தட்பவெட்ப நிலையை சமமாக வைத்திருப்பதற்கு மரங்கள் பெரும் பங்கை அளிக்கின்றன . தொழிற்சாலைகள் அதிகரிப்பு, பருவநிலை  மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பமயமாகி உலகில் பல்வேறு பேரழிவுகள் நடக்கின்றன . 

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தவே   உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது . உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று திருப்பத்தூர் மாவட்ட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்ச விதை பந்துகளை , வன பகுதிகளில் விதைக்கப்பட்டது . இது குறித்து நம்மிடம் பேசிய விதை பறவைகள் இளைஞர் மன்றத்தின் செயலாளர் சிவராஜ் , திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி கிராமத்தில் உள்ள அண்ணா நகரை தலைமை இடம் ஆக கொண்டு விதை பறவைகள் இளைஞர் மன்றம் கடந்த ஒரு ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

இந்திய அரசு இலய்யங்கார் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மன்றத்தில் , தும்பேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மட்டும் , வாணியம்பாடியில் இயங்கிவரும் ஹிந்து மேல்நிலை பள்ளி மாணவர்கள் என ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் 168 மாணவர்கள்  இந்த மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் .

புவி வெப்பமயமாதலை குறித்து பல விழிப்புணர்வுகளை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து செய்துகொண்டு இருந்தாலும் , இந்த கொரோனா ஊரடங்கால்  பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் , எங்கள் மன்ற மாணவர்களை முன்மாதிரியாக வைத்து நாட்டில் உள்ள அணைத்து மாணவர்களுக்கும் சுற்றுசூழல் குறித்தும் அழிந்துவரும் காடுகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து , 10  லட்சம் விதை பந்துகள் தயாரிக்க முடிவு செய்தோம் . எனினும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் வெறும் 40 மாணவர்கள் மட்டுமே விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

40 மாணவர்கள் மட்டுமே பங்குபெற்றாலும் மே ஒன்றாம் தேதி ஆரம்பித்த தயாரிப்பு பணி , மே 20 ஆம் தேதி அன்று மாணவர்கள் பங்களிப்பால் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரித்து ஒரு சாதனையை படைத்துள்ளனர் . மாணவர்கள் தயார்செய்த இந்த ஒரு லட்சம் விதைப்பந்துகளை இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன்அருள் அவர்கள் தலைமையில் ஏலகிரி மலைப்பகுதியில் இன்று விதைக்கப்பட்டது .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் , மாணவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார் . பிற மாவட்டங்களை விட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாகவே இருந்து வருகின்றது . இத்தகைய சூழ்நிலையில் மரங்கள் மற்றும் காடுகள் வளர்த்தல் அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது .

மேலும் மாணவர்களின் இந்த அரும்பணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கீகரிக்கும் வகையில் விரைவில் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget