மேலும் அறிய

தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக தெருநாய்கள் கொலை செய்யப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டன.

தெலங்கானா மாநிலத்தில் 100 நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாடு முழுவதும் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் வெளியில் அழைத்துச் செல்லப்படும் வீட்டு வளர்ப்பு நாய்களாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான காயம் தொடங்கி உயிரிழப்பு வரை நேர்வதால் இந்த விஷயத்தில் கடும் உத்தரவுகளை உச்சநீதிமன்றமே பிறப்பித்தது. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டது. ஆனால் விலங்குகள் நல அமைப்புகளின் எதிர்ப்பால் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் சுணக்கம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக தெருநாய்கள் கொலை செய்யப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில்  தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் பெருமளவில் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகின. இந்த நிலையில் தற்போது 100 நாய்கள் மீண்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 4 மாதங்களில் சுமார் 1300 நாய்கள் கொலை செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தெருநாய் தொல்லையை தீர்க்க மக்களுக்கு வாக்குறுதி அளித்த நிலையில் தெரு நாய்களை கொலை செய்தனர். இந்த நிலையில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளின் இடைப்பட்ட இரவில் அங்குள்ள கிஷ்டபூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் கௌதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா என்ற விலங்கு நல அமைப்பில் பணியாற்றும் அவர், கிஷ்டாபூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி  தெருநாய்களைக் கொன்று அதனை விஷ ஊசி போட்டு ஆற்றின் அருகே புதைத்ததாகக் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜன்னாரம் காவல்துறையினர் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பட்டினி போட்டு கொல்வதும், உணவில் விஷம் வைப்பதும் ஆங்காங்கே பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அரசு தரப்பில் ரேபீஸ் தடுப்பூசி, கருத்தடை ஆபரேஷன் போன்றவை நாய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் கூட நிம்மதியாக வீட்டில் நடமாட முடியவில்லை என பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
Nirmala Sitharaman:
Nirmala Sitharaman: "லாக்டவுன் வதந்திகளை நம்பாதீங்க"மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் அதிரடி விளக்கம்!
India Russia LNG: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ரஷ்யாவுடன் இந்தியா போடும் மெகா எரிசக்தி ஒப்பந்தம்!
India Russia LNG: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ரஷ்யாவுடன் இந்தியா போடும் மெகா எரிசக்தி ஒப்பந்தம்!
சிசிடிவி விதிகளில் அதிரடி மாற்றம்! இனி உளவு பார்க்க முடியாது.. மத்திய அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
சிசிடிவி விதிகளில் அதிரடி மாற்றம்! இனி உளவு பார்க்க முடியாது.. மத்திய அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Embed widget