மேலும் அறிய

சென்னை ; தேர்வு எழுத அனுமதி இல்லை , மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை

தேர்வு எழுத அனுமதி தராததால் , கல்லூரி மாணவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

சென்னையில் தேர்வு எழுத அனுமதி இல்லை , மன அழுத்தத்தில் மாணவர் தற்கொலை

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் ( வயது 18 ) இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 6 - ம் தேதி நடந்த தேர்விற்கு மொபைல் போனை எடுத்து சென்றுள்ளார். அங்கு, தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஸ்ரீமதி, மொபைல் போனை பறிமுதல் செய்து, தேர்வு எழுத அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார். இதனால் வாசுதேவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் , வாசுதேவனின் தாய் கீதா கோவிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் வாசுதேவன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவன் உடலை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாசுதேவனின் தாய் கீதா, போலீசில் அளித்த புகார் ;

என் மகனுக்கு கடந்த 6ம் தேதி செமஸ்டர் தேர்வு நடந்தது. அவன் வகுப்பு கோ - ஆர்டினேட்டர் ஸ்ரீமதி என்பவர், என்னை மொபைல் போனில் அழைத்து, வாசுதேவன் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும், இரண்டு மாணவர்களுடன் அவனை வீட்டிற்கு அனுப்புவதாகவும் கூறினார்.

அவன் வீட்டிற்கு வந்தவுடன், வீடியோ கால் செய்து, அவனை காட்டுமாறு கூறினார். என்ன நடந்தது என நான் கேட்டதற்கு அவன் தேர்வறையில் மொபைல் போன் உபயோகித்ததால், தேர்வு எழுத அனுமதி மறுத்து தனியாக அமர வைத்ததாக வாசுதேவன் கூறினார். அவர்கள் என் மகனை தனியாக வைத்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு, அங்கு என்ன நடந்தது என தெரியவில்லை.

அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் , கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பலமுறை ஸ்ரீமதி அறிவுறுத்தினார். அதற்கு என்ன காரணம் என சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, என் மகனின் இறப்பிற்கு, கல்லுாரியும் மற்றும் விரிவுரையாளர் ஸ்ரீமதியும் தான் காரணம். ஆகவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் கல்லூரி மாணவரை பட்டா கத்தியால் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவருக்கு குண்டாஸ்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் துளசிராமன் ( வயது 19 ) சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவரான இவர் கடந்த ஜூலை 29 - ம் தேதி மாலை, கல்லுாரி முடிந்து திருத்தணி ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது மாநில கல்லுாரி முன்னாள் மாணவரான திருத்தணியைச் சேர்ந்த மாணவர் நவீன் ( வயது 22 ) துளசிராமனை அடித்து பட்டா கத்தியுடன் மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, கடந்த அக்டோபர் 11 - ம் தேதி நவீனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

நவீன் மீது ஏற்கனவே அரக்கோணம், எழும்பூர் ரயில்வே காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, நவீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை புழல் மத்திய சிறையில், அரக்கோணம் ரயில்வே போலீசார் சமர்ப்பித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? குரல் கொடுத்த திருமாவளவன்! பரபரப்பை கிளப்பிய அரசியல் களம்!
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல IT நிறுவனம் !! அதிர்ச்சி தகவல்
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
கனவுலகில் இருக்கும் விஜய்! வேட்பாளார் பட்டியல் எப்போது? ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை - பியூஸ் கோயலின் பரபரப்பு பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Two Wheeler Sale: மின்சார பிரிவிலும் மிரட்டும் TVS - மார்ச்சில் பைக் விற்பனையில் முதலிடம் யாருக்கு? ஹீரோ Vs ஹோண்டா
Two Wheeler Sale: மின்சார பிரிவிலும் மிரட்டும் TVS - மார்ச்சில் பைக் விற்பனையில் முதலிடம் யாருக்கு? ஹீரோ Vs ஹோண்டா
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
Embed widget