" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
தனியாக இருந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காவலர் சஸ்பெண்ட் - கமிஷினர் அதிரடி உத்தரவு

பெண் மீது போதை பொருள் விற்பனை வழக்கு
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராணி ( வயது 32 பெயர் மாற்றப்பட்டுள்ளது ) கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மீது கள்ளச் சந்தையில் மதுபாட்டில் மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 வழக்குகள் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இவர், தற்போது ரகசியமாக மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலருக்கு மாதம் தோறும் மாமூல் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் காவலர் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ம் தேதி இரவு காவலர் சூர்யா, செல்வராணி வீட்டிற்கு சென்று மது விற்பனை செய்வதாக கூறி தனியாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
பாலியல் ரீதியாக தொந்தரவு
தன் மீதுள்ள 3 வழக்குகளை ரத்து செய்ய காவலர் சூர்யாவிடம் செல்வராணி வேண்டுகொள் விடுத்துள்ளார். அதற்கு சூர்யா உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மது போதையில் காவலர் சூர்யா , செல்வராணி வீட்டிற்கு வந்து பழைய வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் திடீரென செல்வராணியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உடைகளை கழற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை சற்றும் எதிர் பார்க்காத செல்வராணி, காவலர் சூர்யாவிடம் 'தாகம் எடுக்கும் என்பதால் உங்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வருவதாக கூறி காவலர் சூர்யாவை அறையில் வைத்து பூட்டி விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த காவலர் சூர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவலர் சஸ்பெண்ட் - கமிஷினர் உத்தரவு
செல்வராணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் மாதர் சங்க நிர்வாகிகள் உதவியுடன் போராட்டம் நடத்துவேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அருண், கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணிடம் மது போதையில் தவறாக நடந்ததால், காவலர் சூர்யா மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஒழுங்கினமாக செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா கடந்த 2017 - ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராக தேர்வானார். பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி தற்போது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















