மேலும் அறிய

ஃபோர்டு விவகாரம் சுமுக தீர்வு ஏற்பட்டது... மறுபுறம் எதிர்க்கும் ஊழியர்கள்...!

ஃபோர்டு தொழிற்சாலை நிர்வாகம் , அரசு, தொழிற்சங்கத்தினர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் மிக முக்கிய கார் தயாரிக்கும் நிறுவனமாக ஃபோர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாக கூறி தொழிற்சாலையை கடந்த வருடம் ஜூன் மாதம் மூடப் போவதாக நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது .
 
கோடிக்கணக்கில் இழப்பு
 
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பல கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

ஃபோர்டு விவகாரம் சுமுக தீர்வு ஏற்பட்டது... மறுபுறம் எதிர்க்கும் ஊழியர்கள்...!
 
215 நாள் ..
 
தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்கள் ஆவது கொடுத்தே தீர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கூறிவந்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
130 நாட்கள் மட்டுமே..
 
இறுதியாக கடந்த வாரம் சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து , அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை  பேச்சுவார்த்தையானது தொடர்ந்தது.

ஃபோர்டு விவகாரம் சுமுக தீர்வு ஏற்பட்டது... மறுபுறம் எதிர்க்கும் ஊழியர்கள்...!
 
 
 
தொழிற்சங்கத்திடம்  தீர்வு
 
நேற்று சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாபதி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது சமூக தீர்வு எட்டப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஒவ்வொரு பணி முடித்த ஆண்டுக்கும் சராசரியாக 140 நாட்கள் ஊதியம் அளிக்கப்படும் எனவும், மேற்கண்டவைக்கு கூடுதலாக ஒரு முறை மட்டும் சிறப்பு தொகையாக தலா 1.5 லட்சம் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தீர்வு தொகுதியாக வழங்க நிர்வாகம் சம்பந்தம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக பத்து நாட்களுக்கான தீர்வு தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு விவகாரம் சுமுக தீர்வு ஏற்பட்டது... மறுபுறம் எதிர்க்கும் ஊழியர்கள்...!
 
 
தொழிற்சங்க தரப்பு விளக்கம்
 
இது தொடர்பாக தொழிற்சங்க பொருளாளர் படவேட்டன் கூறுகையில், முத்தரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில் சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். நிர்வாகம் 140 நாட்கள் மட்டும் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.
 

ஃபோர்டு விவகாரம் சுமுக தீர்வு ஏற்பட்டது... மறுபுறம் எதிர்க்கும் ஊழியர்கள்...!
 
 
ஒரு தரப்பினர் எதிர்ப்பு
 
இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் தெரிவிக்கையில், எங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற தீர்மான வாக்கெடுப்பில், சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை வாய்ப்பு வேண்டும் என வாக்களித்துள்ளனர். எனவே எங்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்ற திங்கட்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்து உள்ளோம் என தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு
Thiruvallur Power Shutdown: திருவள்ளூர் டூ பெரியபாளையம்! நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருவள்ளூர் டூ பெரியபாளையம்: நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தொழில்நுட்பக் கல்வியின் சிகரத்தில் பணிபுரிய ஆசையா? ஐஐடி மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு!
தொழில்நுட்பக் கல்வியின் சிகரத்தில் பணிபுரிய ஆசையா? ஐஐடி மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Ravi Mohan: ஆண் மட்டுமே தவறு செய்பவன் அல்ல.. ரவி மோகனுக்கு பிரபல நடிகை ஆதரவு!
Ravi Mohan: ஆண் மட்டுமே தவறு செய்பவன் அல்ல.. ரவி மோகனுக்கு பிரபல நடிகை ஆதரவு!
Embed widget