மேலும் அறிய

தரமான செங்கல்லை கண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

செங்கல்லையே தேர்வு செய்யும் மக்கள், எப்படி நல்ல செங்கல்லை கண்டுபிடிப்பது? தரமான செங்கல் எது? செங்கல் கட்டுமானத்தில் செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்ன?

இன்று ஹாலோபிளாக், கான்கிரீட் கல், ஏஏசி கல், போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்துவிட்டாலும், நம்மூரில் வீடுகட்டுபவர்கள் அதிகம் விரும்புவது செங்கல்லை தான். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நமது பழக்கவழக்கம். நம்மூரில் நாம் பார்த்த வீடுகள் அனைத்தும் செங்கல்லில் கட்டப்பட்டவை. அவற்றில் காலம், தரம் ஆகியவற்றை நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அதனால் அவற்றை பயன்படுத்துவதில் சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் மக்கள் தெளிவுடம் உள்ளனர். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள கற்கள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று மக்களுக்கு ஆதாரப்பூர்வமாகத் தெரியாது. அதனால் செங்கல்லையே தேர்வு செய்யும் மக்கள், எப்படி நல்ல செங்கல்லை கண்டுபிடிப்பது? தரமான செங்கல் எது? செங்கல் கட்டுமானத்தில் செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்ன?

தரமான செங்கல்லை கண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

தரமான செங்கல்லை கண்டுபிடிக்கும் வழிகள்:

  • செங்கல்லின் நிறம் பார்த்தாலே தெரியும், நல்ல சிவப்பாக இருக்கிறது என்றால், அந்த செங்கல் நன்றாக வெந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
  • ஒரே செங்கல்லின் இரு வேறு பக்கங்களில் இரு வேறு நிறங்களாக இருந்தால் சமமாக வேகவில்லை என்று அர்த்தம், அது நல்ல செங்கல் இல்லை.
  • செங்கல்லை நம் விரல் நகங்கள் கொண்டு தட்டி பார்க்க வேண்டும், அதி இருந்து மெட்டலை தட்டுவது போன்ற சத்தம் வர வேண்டும். அப்படி வந்தால் அது நல்ல செங்கல்.
  • செங்கல்லை நம் இடுப்பளவு உயரத்தில் இருந்து தரையில் போட வேண்டும். அப்படி செய்யும்போது உடையாமல் இருந்தால், அது நல்ல செங்கல்.
  • செங்கல் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டால், அதன் எடை 20 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும், அதற்கு மேல் அதிகரித்தால், அது நல்ல செங்கல் இல்லை, உள்ளே சிறு சிறுதுளைகள் நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.
  • மற்றொரு வழி, நாம் செங்கல்லை வாங்கும்போதே தெரியும். செங்கல்லை ஏற்றும்போதும், இறக்கும்போது, அதனை தூக்கி தூக்கி வீசிதான் கொண்டு வருவார்கள். அப்போது உடையாமல் இருக்கும் செங்கல் எல்லாம் நல்ல செங்கல்தான். 

தரமான செங்கல்லை கண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்:

செங்கல்லில் வீடு கட்டுவதனை அதிகமாக மக்கள் விரும்புவதற்கு காரணம், அதன் நம்பகத்தன்மை. பல வருடங்கள் தாங்கும் என்பதை நாமே கண்கூடாக பார்த்து வருகிறோம். புதிய செங்கல்கள் எத்தனை வருடம் வீணாகாமல் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. மற்றொன்று எல்லா மேஸ்திரிகளும், கொத்தனார்களுமே பழகியிருப்பது செங்கல்லுக்குதான். அதனால் ஒரு இன்ஜினியர் இல்லாமல், மேஸ்திரி, கொத்தனார்களை வைத்தே வீட்டை கட்டி முடிக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, நம்மூரில் எளிதில் கிடைக்கும் பொருள் என்பதும், விலை மலிவாக கிடைக்கும் பொருள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

செங்கல்லில் வீடு கட்டும்போது கண்டிப்பாக செங்கல்லை நனைத்துவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது, செங்கல்களில் இடைவெளிகளில் நன்றாக சிமெண்ட் வைத்து அடைத்து கட்ட வேண்டும். அதனை பிறகு பூச்சு வேலை செய்யும்போது சரி ஆகி விடும் என்று விடுவது சரி அல்ல. அப்படி செய்தால், இடையில் இடைவெளி ஏற்பட்டு பிற்காலத்தில் உள்ளேயோ, வெளியேயோ விரிசல் ஏற்படலாம், தண்ணீர் எளிதில் செங்கல்லை நனைக்க துவங்கும். செங்கல் எளிதில் தண்ணீரை பற்றக்கூடியது. ஓரு செங்கல் நனைந்தால் வரிசையாக அனைத்து செங்கற்களும் நனைய தொடங்கும். புதிதாக வந்துள்ள கற்களை பொறுத்தவரையில் இந்த பிரச்சனை இல்லை, அவை பெரிதாகவும் சமமாகவும் இருப்பதால், இடைவெளிக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைவு.

மேலும் செங்கல் வீடு கட்டும்போது அதற்கு ஒரு நாளுக்கு 3 முறை தண்ணீர் ஊற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல், 28 நாட்கள் வரை நனைக்கலாம். ஆனால் பலர் நிறைய தண்ணீர் ஊற்றினால் இன்னும் வலுவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது சரி அல்ல, அளவுகி அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. 

செங்கற்களில் கட்டும்போது அதற்கு நாட்கள் அதிகம் ஆகும், அதனால் ஆள் கூலி அதிகமாகும். புதிய கற்கள் பெரிதாக இருப்பதால் விரைவில் கட்டி முடிக்க முடியும், கொத்தனார் கூலி குறையும். பூச்சு வேலைக்கு சிமெண்ட் அளவு குறைவாகவே தேவைப்படும். எல்லாவற்றிலும் நல்லது கெட்டது உண்டு, உங்கள் தேவைகளுக்கு எது பொருந்துகிறதோ அதனை வாங்கி பயன்படுத்தவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
ஸ்மார்ட்போன் முதல் தூக்கம் வரை: உங்கள் உற்பத்தித்திறனை ரகசியமாக அழிக்கும் 7 'சைலண்ட்' எதிரிகள்!
ஸ்மார்ட்போன் முதல் தூக்கம் வரை: உங்கள் உற்பத்தித்திறனை ரகசியமாக அழிக்கும் 7 'சைலண்ட்' எதிரிகள்!
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Embed widget