மேலும் அறிய

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? ஆதார் துறையில் Project manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

இப்பணிக்குத் தேர்வாகும் நபர்கள், கிராமப்புறப்பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும் எனவும், கணினி தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் கையாள்வதில் திறமைக்கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் துறையில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், திறமையுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதாரின் முதல் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாக தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை எடுக்கும் பணி தீவிரமாக தற்போதும் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த  டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும்  பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட ஆதார் நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? ஆதார் துறையில் Project manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஆதார் துறையில் Project Manger பணிக்கானத் தகுதிகள்:

கல்வித்தகுதி:

ஆதார் துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழங்களில் இந்த பணிக்குத் தொடர்புடைய B.Tech, B.E, M.Tech, MCA, MBA, PGDM போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் Project Management/ Software Project Management / executing Business Process Reengineering exercise போன்ற பிரிவில் Government Quasi அல்லது Government அல்லது Public Sector undertakings போன்றவற்றிற்காக குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535  என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவம் குறித்த தகவல்களை தவறில்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

இதோடு தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னதாக அனைத்து தகவல்களும் சரியாகஉள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – பிப்ரவரி 28, 2022

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்வாகும் நபர்கள், கிராமப்புறப்பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும் எனவும், கணினி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கையாள்வதில் திறமைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

நேர்காணல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கு, தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget