மேலும் அறிய

Eye Drops : கண்ணுக்கான சொட்டு மருந்தை, குப்பியை திறந்து ஒரு மாதத்துக்கு மேல பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை..

மருந்தைத் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திடவும் என்பதே அந்த எச்சரிக்கை வாசகம். இதுபோன்ற நுட்பமான விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இது.

கண்ணில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளுக்கு நம்மில் பலரும் நாமே மருந்துக் கடைகளில் ஜென்டாமைசின் போன்ற மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது உண்டு. சிலர் முறையாக மருத்துவரை நாடி மருந்துகளைப் பெறுவதும் உண்டு. மருந்தை எப்படி வாங்கினாலும் அதில் பெரிய எழுத்துகளில் ஒரு எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். மருந்தைத் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திடவும் என்பதே அந்த எச்சரிக்கை வாசகம். இதுபோன்ற நுட்பமான விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இது.

உங்களுக்கு ஒருவேளை இதுவரை அதற்கான விளக்கம் தெரியாவிட்டால் இதைப் படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள். கண் மருந்தில் திறந்தபின்னர் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தவும் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்றால் கண் மருந்து எளிதில் வெளிப்புற கிருமிகளால் அசுத்தமாகும் வாய்ப்பு மிகமிக அதிகம். அதனால் ஒரு மாதத்திற்குப் பின்னரும் நாம் கண் மருந்தை பயன்படுத்தும்போது அதனால் கண்களில் மிகவும் ஆபத்தான தொற்று நோய்கள் ஏற்படக்கூடும்.

இது குறித்து கண்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சா பியாரே அளித்துள்ள பேட்டியில், "கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களில் மருந்துகளை ஊற்றுவது என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டியது. ஒரு கண் மருந்து பாட்டிலைத் திறந்து பயன்படுத்த ஆரம்பித்து ஒரு மாதத்திற்குப் பின்னரும் அதைப் பயன்படுத்தினால் கண்களில் தீவிர தொற்று ஏற்படும்.

பெரும்பாலான கண் மருந்துகள் கண்ணில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றை குணப்படுத்தவே தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் காலாவதி தேதி இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் என்று இருந்தாலும் கூட அவற்றை திறந்தபின்னர் அவற்றின் காலாவதி காலம் 28 நாட்கள் தான். திறந்ததில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் கண் மருந்துகள் கெட்டுப்போவது உறுதி. அதனால் அத்தகைய மருந்தை பயன்படுத்தினால் கண் பார்வை கூட பறிபோகலாம். எடுத்தவுடனேயே பார்வை பறிபோகாது. கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள்.

கண் மருந்துகளைப் பயன்படுத்தும் முன்னர் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். மருந்தின் குறிப்பேட்டில் கொடுத்திருக்கும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். படுத்துக் கொண்டு தலையை கொஞ்சம் பின்னால் சாய்த்துக் கொண்டு மருந்தை கண்ணில் ஊற்றவும். ஒரு சொட்டு என்று கொடுத்திருந்தால் ஒரு சொட்டு மட்டுமே விடவும். மருந்தை ஊற்றிய பின்னர் கண்களை மூடிக் கொண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு மாதம் முடிந்தவுடன் மருந்து பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு மருத்துவரை ஆலோசித்துவிட்டு தேவைப்பட்டால் மருந்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளார்.

கண் மருந்தால் பறிபோன உயிர்:

சென்னைக்கு அருகே உள்ள, தனியார் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கண் மருந்தில், அதிகளவு பாக்டீரியாவால் அமெரிக்காவில் 55 பேரின் பார்வை பறிபோனது. மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மாதம் நடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் மத்திய அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது நினைவில் இருக்கலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
தூங்கி எழுந்ததும் தலைச்சுற்றல்: அலட்சியம் வேண்டாம்! ஆரோக்கிய எச்சரிக்கை
தூங்கி எழுந்ததும் தலைச்சுற்றல்: அலட்சியம் வேண்டாம்! ஆரோக்கிய எச்சரிக்கை
Patanjali: சிறுநீரகப் பாதுகாப்பிற்கு ஆயுர்வேத வரம்.. பக்க விளைவுகளைக் குறைக்கும் பதஞ்சலியின் ரெனோக்ரிட்
Patanjali: சிறுநீரகப் பாதுகாப்பிற்கு ஆயுர்வேத வரம்.. பக்க விளைவுகளைக் குறைக்கும் பதஞ்சலியின் ரெனோக்ரிட்
காய்ச்சலுக்கான ஒரு ஆயுர்வேத தீர்வு... பதஞ்சலி ஃபெவோக்ரிட் கிலாய் மற்றும் சிராயதா போன்ற மூலிகைகளுடன்
காய்ச்சலுக்கான ஒரு ஆயுர்வேத தீர்வு... பதஞ்சலி ஃபெவோக்ரிட் கிலாய் மற்றும் சிராயதா போன்ற மூலிகைகளுடன்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
பகுதிநேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் & வாழ்வாதார சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? எழும் வலியுறுத்தல்!
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Embed widget