மேலும் அறிய

Eye Drops : கண்ணுக்கான சொட்டு மருந்தை, குப்பியை திறந்து ஒரு மாதத்துக்கு மேல பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை..

மருந்தைத் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திடவும் என்பதே அந்த எச்சரிக்கை வாசகம். இதுபோன்ற நுட்பமான விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இது.

கண்ணில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளுக்கு நம்மில் பலரும் நாமே மருந்துக் கடைகளில் ஜென்டாமைசின் போன்ற மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது உண்டு. சிலர் முறையாக மருத்துவரை நாடி மருந்துகளைப் பெறுவதும் உண்டு. மருந்தை எப்படி வாங்கினாலும் அதில் பெரிய எழுத்துகளில் ஒரு எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். மருந்தைத் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள் பயன்படுத்திடவும் என்பதே அந்த எச்சரிக்கை வாசகம். இதுபோன்ற நுட்பமான விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இது.

உங்களுக்கு ஒருவேளை இதுவரை அதற்கான விளக்கம் தெரியாவிட்டால் இதைப் படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள். கண் மருந்தில் திறந்தபின்னர் ஒரு மாதத்திற்குள் பயன்படுத்தவும் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள் என்றால் கண் மருந்து எளிதில் வெளிப்புற கிருமிகளால் அசுத்தமாகும் வாய்ப்பு மிகமிக அதிகம். அதனால் ஒரு மாதத்திற்குப் பின்னரும் நாம் கண் மருந்தை பயன்படுத்தும்போது அதனால் கண்களில் மிகவும் ஆபத்தான தொற்று நோய்கள் ஏற்படக்கூடும்.

இது குறித்து கண்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சா பியாரே அளித்துள்ள பேட்டியில், "கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களில் மருந்துகளை ஊற்றுவது என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டியது. ஒரு கண் மருந்து பாட்டிலைத் திறந்து பயன்படுத்த ஆரம்பித்து ஒரு மாதத்திற்குப் பின்னரும் அதைப் பயன்படுத்தினால் கண்களில் தீவிர தொற்று ஏற்படும்.

பெரும்பாலான கண் மருந்துகள் கண்ணில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றை குணப்படுத்தவே தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் காலாவதி தேதி இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் என்று இருந்தாலும் கூட அவற்றை திறந்தபின்னர் அவற்றின் காலாவதி காலம் 28 நாட்கள் தான். திறந்ததில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் கண் மருந்துகள் கெட்டுப்போவது உறுதி. அதனால் அத்தகைய மருந்தை பயன்படுத்தினால் கண் பார்வை கூட பறிபோகலாம். எடுத்தவுடனேயே பார்வை பறிபோகாது. கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள்.

கண் மருந்துகளைப் பயன்படுத்தும் முன்னர் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். மருந்தின் குறிப்பேட்டில் கொடுத்திருக்கும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். படுத்துக் கொண்டு தலையை கொஞ்சம் பின்னால் சாய்த்துக் கொண்டு மருந்தை கண்ணில் ஊற்றவும். ஒரு சொட்டு என்று கொடுத்திருந்தால் ஒரு சொட்டு மட்டுமே விடவும். மருந்தை ஊற்றிய பின்னர் கண்களை மூடிக் கொண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு மாதம் முடிந்தவுடன் மருந்து பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு மருத்துவரை ஆலோசித்துவிட்டு தேவைப்பட்டால் மருந்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் திறந்ததில் இருந்து ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளார்.

கண் மருந்தால் பறிபோன உயிர்:

சென்னைக்கு அருகே உள்ள, தனியார் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்த கண் மருந்தில், அதிகளவு பாக்டீரியாவால் அமெரிக்காவில் 55 பேரின் பார்வை பறிபோனது. மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மாதம் நடந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் மத்திய அரசு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது நினைவில் இருக்கலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Richest Lok Sabha Members: 18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Vikravandi By - Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் - அண்ணாமலை
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Richest Lok Sabha Members: 18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும்  நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Embed widget