மேலும் அறிய

ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்!

ஜம்மு கோட்டத்தில் அதிகரித்து வரும் டெங்குவைக் கட்டுப்படுத்த மலேரியாலஜிஸ்ட் அலுவலகம் மற்றும் குடிமை அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலுக்கு பஞ்சமே இருக்காது. இதனைக்கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் அதில் எந்தவித பலனும் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏற்கனவே கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் சுகாதாரத்துறை தவித்துவரும் நிலையில், தற்போது ஜம்முவில் வேகமாக பரவிவரும் டெங்குகாய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாள்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 659 பேர் ஜம்மு மாவட்டத்தில் உள்ளவர்கள். இதில் கதுவாவில் 194 பேர் மற்றும் சம்பாவில் 94 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. மேலும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 1,078 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்!

 தற்போது தான் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து மக்கள் பெருமூச்சுவிடும் சமயத்தில் தற்போது பரவிவரும் டெங்கு காய்ச்சல் மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எனவே இந்த அச்சுறுத்தலைக்கட்டுப்படுத்த ஜம்மு காஷ்மீரில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக  நோயறிதல் வசதிகளுடன் கூடிய பத்து கண்காணிப்பு மருத்துவமனைகள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதோடு ஜம்மு கோட்டத்தில் அதிகரித்து வரும் டெங்குவைக் கட்டுப்படுத்த மலேரியாலஜிஸ்ட் அலுவலகம் மற்றும் குடிமை அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தடுப்பு நடவடிக்கையில் ஜம்மு முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, ஜம்மு நகர்ப்புறங்களில் உள்ள 75 வார்டுகளில் கொசுக்களைக் கொல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல சம்பா, கதுவா மற்றும் உதம்பூர் போன்ற பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்திவருகிறது.

  • ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்!

இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. நல்ல தண்ணீரின் மூலம் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், மக்களுக்கு இதுக்குறித்த விழிப்புணர்வு வார்டு வார்டாக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக எந்த தடுப்பு மருந்தையும் உட்கொடுக்கக்கூடாது எனவும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான மருந்தினை உட்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.  குறிப்பாக மூன்று நாள்கள் கடுமையான காய்ச்சலுடன் 7 நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கும் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.