மேலும் அறிய

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் பிரபல ராப் பாடகர்..யார் இந்த வேடன்?

பிரபல மலையாள பாடகர் வேடன் அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்கள் இடையில் மேலும் ஆதரவு வலுத்துள்ளது.யார் இந்த வேடன்?

யார் இந்த வேடன் 

பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் சமீபத்தில் 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கேரள போலீஸால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு சமூக வலைதளத்தில் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

சமீபத்தில் இந்த பெயர் கேரளம், ஈழ மக்கள், தமிழ்நாடு என தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வேடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். வேடனின் அம்மா ஈழ தமிழர், ஈழத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று பின் கேரளாவில் குடிபெயர்ந்து ஒரு மலையாளியை திருமணம் செய்துகொண்டார். இவரது மகன் தான் வேடன் என்கிற  ஹிரன்தாஸ் முரளி பிறக்கிறார்.

இனத்தால் , நிறத்தால் , சாதியால் பல ஒடுக்குமுறைகளை சந்தித்து வளரும் ஹிரன்தாஸ் ராப் பாடல்களின் மீது ஆர்வம் கொள்கிறார். ராப் பாடல்களை எழுதி அதை பாடி தானே பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.  சாதி, மதம், இடதுசாரி, வலதுசாரி, அரசியல் என எல்லாவற்றையும் உள்வாங்கி "வேடனாக" தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டு Rapper ஆக உருவெடுக்கிறார்.

வேடனின் பாடல்கள்  சாதி, மதம், பிரிவினைக்கு எதிரான வரிகளை மையமாக கொண்டவையாக இருந்தபடியால் சமூக வலைதளங்களில் அவருக்கு இளம் தலைமுறையினரிடம் பரவலான வரவேற்பு  கிடைத்தது. 'குரலற்றவர்களின் குரல்' என ஒரு இசைக்குழுவை உருவாக்கி அதன் மூலம் பல பாடல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழிலும் அவருக்கு பரவலாக ரசிகர்கள் பெருகினர்.  

ஈழ போராட்டத்தை, பாலஸ்தீனத்தை ஆதரித்து பாடுகிறார். எங்கெங்கு யார் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக பாடுகிறார். இவரது பாடல்கள் பெரும்பாலும் வலதுசாரிகளை கேள்வி கேட்கும் விதமாக அமைந்திருப்பவை. 

வேடன் கைது செய்யப்பட்டது ஏன் ?

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கொச்சியில் வேடன் கைது செய்யப்பட்டார். 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததற்காக வேடன் உட்பட அவருடன் 8 நண்பர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  வேடனுக்கு ஆதரவாக கேரள இளைஞர்களும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நிற்க மேலும் பரவலான மக்கள் கவனத்தை ஈர்த்தார். மேலும் வேடன் கழுத்தில் புலி நகத்தை அணிந்திருந்தததால் புலியை வேட்டையாடினாரா என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. தான் அணிந்திருந்த புலி நகம் தனது நண்பரால் தனக்கு பரிசளிக்கப் பட்டதாக வேடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சாதி , மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தனது பாடல்களில் வழியாக குரல் கொடுத்து வருகிறார் வேடன். அவருடன் தற்போது ஒட்டுமொத்த கேரள இளைஞர்களும் இணைந்து நிற்கிறார்கள். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget