மேலும் அறிய

ரூ.40 கோடி டீல் பேசிய நெட்ஃபிளிக்ஸ்.! குறுக்கே நின்ற மம்முட்டி.. நோ சொன்ன துல்கர்!

நெட் ப்ளிக்ஸ் உடனான குருப் படத்தின் ஒப்பந்தத்தை மம்முட்டி வேண்டாம் என்று சொன்னதால் குருப் படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் குருப். இந்தத்திரைப்படத்தை  'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கர் சல்மானை திரையுலத்திற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். குருப் திரைப்படம் சுகுமார் குருப் என்ற குற்றவாளியின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

தனது இன்சுரன்ஸ் பணத்தை பெறுவதற்காக குருப் தான் இறந்து விட்டதாக நாடமாட, தனக்கு பதிலாக சாக்கோ என்பவரை காரில் வைத்து எரித்து கொன்றான். போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது. இதனிடையே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற குருப் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. 1984 ஆம் ஆண்டு கேரளாவையே உலுக்கிய இந்த கொலைவழக்கை மையப்படுத்திதான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 


ரூ.40 கோடி டீல் பேசிய நெட்ஃபிளிக்ஸ்.! குறுக்கே நின்ற மம்முட்டி.. நோ சொன்ன துல்கர்!

நான்கு மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக குருப் திரைப்படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே சென்றது. இதனால் கடந்த ஒரு வருடமாக படம் வெளியாகமலே இருந்தது. இந்த நிலையில்தான் பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் குருப் படத்தை 40 கோடிக்கு வாங்க முன் வந்ததாகத் தெரிகிறது. 


ரூ.40 கோடி டீல் பேசிய நெட்ஃபிளிக்ஸ்.! குறுக்கே நின்ற மம்முட்டி.. நோ சொன்ன துல்கர்!

இந்த நிலையில்தான் துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து திருப்தி அடைந்த மம்முட்டி, படத்தை ஓடிடிக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திரையரங்குகளில் வெளியீடுமாறும் ஆலோசனை கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தப்படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிட்டால் இதில் கிடைக்கும் லாபம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் உதவிகரமாகஇருக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்துதான் துல்கர் சல்மான் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதன் தமிழ் வெளியீடு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. முன்னதாக மலையாளத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளியான படங்கள் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது இப்படி இருக்க, மலையாள முன்னணி நடிகருமான மோகன்லால் தனது 5 படங்களை ஒடிடியில் ரீலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் ஒடிடியின் நாயகனாகவே மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இதுக்குறித்து ஆசிர்வாத் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தெரிவிக்கையில், மோகன்லாலின் Bro Daddy, 12th Man, Alone உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட 21 நாள்கள் கழித்து  ஓடிடியில் வெளியிட அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை 80 தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் மற்றவர்கள் இதனை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தியேட்டரில் இனி படங்களை வெளியிடவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget