மேலும் அறிய

Vairamuthu: காவிரி தாயே...நீ எங்கள் உரிமை...அதிகாரம்...பாலத்தில் நின்று கவிதை எழுதிய வைரமுத்து

தமிழ் மொழியின் புலமையால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆண்டு வருபவர் வைரமுத்து.

காவிரி ஆற்றின் பாலத்தில் நின்று கவிப்பேரரசு வைரமுத்து கவிதை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ் மொழியின் புலமையால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆண்டு வருபவர் வைரமுத்து. அவர் பெயரை சொன்னாலே வெள்ளை ஜிப்பாவும், அவரின் தமிழும் தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்னும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பயணப்பட்டவர் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணியில் இருந்த அவர் பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்ததால் தான் தன்னுடைய தமிழ் சர்வதேச எல்லைகளை கடந்ததாக தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு இவரது பாடல் வரிகள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் காதல் ரசனையுடனே எழுதப்பட்டிருக்கும். முதல் மரியாதை, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால்,ரோஜா, தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை ஆகிய படங்களின் பாடல்களுக்காக வைரமுத்து தேசிய விருதும் வென்றுள்ளார். 

ஒவ்வொரு தலைமுறைக்கும் பாட்டெழுதி தன்னை புதுப்பித்துக் கொண்டே வரும் வைரமுத்து தற்போது திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் காவிரி நீரை பார்த்து கவிதை ஒன்றை வார்த்துள்ளார். திருச்சி
காவிரிப் பாலம்  நில்லாமல் ஓடும் காவிரியில் நின்றெழுதிய கவிதை என்ற கேப்ஷனில் இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாய்ந்தோடும் காவிரியே..எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே...வரலாற்றின் இரத்தமே..எங்கள் வயல்களில் துறவ சாப்பாடே...பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாய் கேள்விப்பட்டு நான் கிறுக்கெடுத்து ஓடி வந்தேன்...கரிகாலன் கால் நனைத்தது நீதான்.. கவிஞர்களின் மீது திரவ முத்துக்கள் தெளித்தது நீதான்...ராஜராஜ சோழனின் வாள் முனையை...உழவனின் ஏர்முனையை தீட்டித் தந்தவள் நீதான்...

கரைதொட்டு பாய்ந்தோடும் காவிரியே...உன் அழகில் பறை கொட்டி பறை கொட்டி பாவி மனம் கூத்தாடும்..உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே...கடலோடு சேராமல் கலனிகளில் சேர்வாயே...மலைத்தலய கடற் காவிரியே என கடியலூர் உருத்திரங்கண்ணன் முதல் காவிரி தாயே..காவிரி தாயே..காதலர் விளையாட பூவிரித்தாயே என கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் ஓராயிரம் புலவர்களுக்கு பாடுபொருளாகியா பால் நதியே...நீ யாரோ இட்ட பிச்சை அல்ல...எங்கள் உரிமை...நீ அரசியலின் ஆசீர்வாதம் அல்ல...எங்கள் அதிகாரம்..உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம்...அணைக்கட்ட விட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget