Jailer: ஜெயிலர் படத்தில் இதையெல்லாம் மாற்ற வேண்டும் - ரத்த காட்சிகளால் உத்தரவிட்ட தணிக்கை குழு
ஜெயிலர் படத்தில் ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், திட்டும் இடங்களில் மியூட் போடவும் உத்தரவிட்ட தணிக்கை குழு

ஜெயிலர் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், சில இடங்களில் மியூட் போடவும் உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியாவாக உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசை அமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் திரைக்கு வருகிறது.
முன்னதாக தமன்னாவின் அசத்தல் நடத்தில் வெளியான காவலா பாடலும், ரஜினியின் மாஸ் வசனத்தில் வெளியான ஹூக்கும் பாடலும் மாஸ் ஹிட்டாக இணையத்தில் டிரெண்டாகியது. அந்த வரிசையில் நேற்று மாலை ஜெயிலர் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டது. ‘ஜுஜுபி’ என்ற பெயரில் வெளியான 3 நிமிட பாடல் வரிகள் ரஜினியின் அதிரடி ஆக்ஷனை காட்டியுள்ளது.
அனிருத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளை பாடகி தீ தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தி உள்ளார். பாடலில் ”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, கரண்டுல கைய வச்சிப்புட்ட, காவு வாங்காம விடுமா” வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜுஜுபி பாடலில் அனிருத்தின் மிரட்டல் இசையும், ரஜினியின் மிரட்டல் காட்சிகளும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















