Siragadikka Aasai : ஏத்திவிடுறதே இந்த ரோகிணிக்கு வேலையா போச்சு... விஜயாவை மிரட்டிய ஸ்ருதி... சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today :கீழே கொட்டிய எண்ணெயில் வழுக்கி விழுந்த விஜயா ஆர்ப்பாட்ட செய்ய அவளை எதிர்த்து பேசுகிறாள் ஸ்ருதி. மீனாவுக்கு எதிராக விஜயாவை தூண்டி விடும் ரோகிணி. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது?

Siragadikka Aasai serial August 30 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி விஜயாவை பயமுறுத்துவதற்காக பேய் போல ஆடியோ பிளே செய்து "இது என் வீடு. வீட்டை விட்டு வெளியே போ" என மிரட்ட விஜயா பயத்தில் அலறுகிறாள். மனோஜும் அந்த சத்தம் கேட்டு பயப்படுகிறான். இருவரும் ஒரே நேரத்தில் வெளியில் வர ஸ்ருதியும் மீனாவும் போய் ஒளிந்து கொள்கிறார்கள். மனோஜும் விஜயாவும் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் பயப்படுவதை பார்த்த மீனா போதும் ஸ்ருதி என லைட்டை போட்டு உண்மையை சொல்கிறாள். அதற்கும் மீனா தான் காரணம் என விஜயா மீனாவை திட்டி தீர்க்கிறார். இது என்னோட ஐடியா என ஸ்ருதி சொன்னாலும் அதை கேட்காமல் மீனாவை தான் திட்டுகிறாள் விஜயா.























