மேலும் அறிய

Ethirneechal: ஞானத்தை தேடி வந்த பிரச்சினை; தொழில் தொடங்க பேச்சுவார்த்தை... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : குணசேகரனுக்கும் விசாலாட்சி அம்மாவுக்கு நந்தினி கொடுத்த சரியான பதிலடி. ஞானத்தால் வந்த அடுத்த சிக்கல். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் நேற்றைய (மே 24) எபிசோடில் காதுகுத்தில் பெரிய அளவில் பணம் மெய்யாக வரவில்லை. சில பங்காளிகள் வந்து "குணசேகரனுக்காக தான் நாங்க இங்க வந்தோம் அவரே வரவில்லை எனும் போது நாங்க எதுக்கு மொய் எழுத வேண்டும். அவர் தான் ஒன்னு நீங்க எல்லாரும் பூஜ்யம். ஒன்னு இல்லாமல் பூஜ்ஜியத்துக்கு எந்த மதிப்பும் இல்லை" என அவமானப்படுத்தி பேச கோபத்தில் அனைத்தையும் தூக்கி விசிறி எறிந்து "இதெல்லாம் தேவையா? இருந்த கொஞ்ச மானமும் போயிருச்சு. எல்லாம் இவளையும்  இவ அப்பனையும் சொல்லணும்" என நந்தினியையும், அவளுடைய அப்பாவையும் பயங்கரமாக திட்டுகிறான் கதிர்.

ஈஸ்வரி, ரேணுகா என அனைவரும் கதிரை சமாதானப்படுத்தி "அவங்க எல்லாரும் செய்யலைன்னா என்ன? நாங்க எல்லாரும் இல்லையா? நாங்க இருக்கோம்" என சொல்லி ஈஸ்வரி கம்மலை கழட்டி போட, தர்ஷினி வளையலை கழட்டி போடுகிறாள். ரேணுகா மொய்க்காக கொண்டு வந்த சங்கிலியை போடுகிறாள். ஞானம் பிரெண்ட் ஒருவரின் மூலம் பணம் ஏற்பாடு செய்து எடுத்து வந்து கொடுக்கிறான். ஈஸ்வரியின் அப்பாவும், நந்தினியின் அப்பாவும் அவர்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள். "உங்களுக்கு ஏதாவது ஒன்னு என்றால் நாங்க இருக்கோம். எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தா நீங்க வரமாட்டீங்களா" என அனைவரும் நந்தினியின் தொழில் நன்றாக வரும் என வாழ்த்துகிறார்கள்.

 

Ethirneechal: ஞானத்தை தேடி வந்த பிரச்சினை; தொழில் தொடங்க பேச்சுவார்த்தை... எதிர்நீச்சலில் இன்று


"நந்தினி நீங்க மூன்று பெரும் எனக்கு போதும். வேற யாரும் தேவையில்லை" என்கிறாள். இங்கு நடந்த அனைத்தையும் பார்த்து கொந்தளித்த குணசேகரன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வீட்டுக்கு வந்ததும் விசாலாட்சி அம்மா யாரும் இல்லாத நேரமாக பார்த்து தாராவை ஆசீர்வாதம் செய்து பணம் கொடுக்கிறார். அதை பார்த்துவிட்ட நந்தினி "ஏன் அவர் இருக்கும் போது ஒரு மாதிரி இருக்கீங்க, அவர் இல்லாத போது வேற மாதிரி இருக்கீங்க. எப்பவும் ஒரே மாதிரி பெரிய மனுஷியா நடந்துக்கோங்க" என குணசேர்க்கன் கோயிலில் செய்த அசிங்கத்தை பற்றி சொல்லி வருத்தப்படுகிறாள்.


அந்த நேரம் குணசேகரன் வீட்டுக்கு வந்து விசாலாட்சி அம்மாவை திட்டுகிறார். "என்னை அசிங்க படுத்துன அவங்களோட சேர்ந்துக்கிட்டியா" என கேட்கிறார். "யார் யாரை அசிங்கப்படுத்தினது? நாங்களா இல்லை நீங்களா? " என ரேணுகா கேட்டு சரியான பதிலடி கொடுக்கிறாள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

Ethirneechal: ஞானத்தை தேடி வந்த பிரச்சினை; தொழில் தொடங்க பேச்சுவார்த்தை... எதிர்நீச்சலில் இன்று



நந்தினி தாராவிடம் "ஏதாவது கொடுத்தாங்க வாங்கிடாத. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது" என சொல்லி விட்டு செல்கிறாள். அன்று இரவு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் "பெயர் வைக்கப் போறோம். பாப்புலரா விளம்பரம் பண்ண போறோம்" என ஜனனி சொல்கிறாள். அதை கேட்ட கதிர் "ஏற்கனவே அந்த ஆளு தையா தக்கா என குதித்துக்கொண்டு இருக்குறாரு. இதெல்லாம் தெரிஞ்சதுனா அவ்வளவு தான்" என்கிறான். அவன் அப்படி பேசியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

 



அடுத்த நாள் காலை ஞானத்தை தேடி பணம் கொடுத்த பிரெண்ட் வீட்டுக்கு வருகிறான். "அவசர தேவைக்காக பணம் கேட்ட அதுக்கு அப்புறம் போனையும் காணும், பணத்தையும் திருப்பி தரல. அது தான் கேட்டுட்டு போகலாம் என வந்தேன்" என்கிறான். அதை கேட்டு அனைவரும் ஷாக்காகி நிற்கிறார்கள். என்ன சொல்வதென புரியாமல் ஞானம் தலைகுனிந்து நிற்கிறான். இது அனைத்தையும் குணசேகரன் கேட்டு கொண்டு இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்
Health Ministry Warning: இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
இயர்ஃபோன், ஹெட்ஃபோன்களால் ஆபத்து.. சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
Embed widget