மேலும் அறிய

Bigg Boss Dinesh: ரச்சிதாவோட பேசற சந்தர்ப்பம் இனி அமையுமானு தெரியல.. பிக்பாஸ் போன காரணம்.. தினேஷ் பளிச்!

Bigg Boss: “பிக்பாஸ் நிகழ்ச்சி ரச்சிதாவுக்கு ரொம்ப பிடிக்கும். முந்தைய சீசன்கள பாத்துட்டு வீடியோக்கள் பதிவிடுவாங்க. போன சீசன்ல 90 நாள் வரை இருந்துட்டு வந்தாட்டங்க. அதனால இத செய்ய நினைச்சேன்” - தினேஷ்

பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற தினேஷ் இந்த சீசனில் அர்ச்சனாவுக்குப் பிறகு அதிக ஆதரவுகளைப் பெற்ற வைல்டு கார்டு போட்டியாளராக விளங்கினார்.

ரச்சிதாவுடனான பிரிவு


Bigg Boss Dinesh: ரச்சிதாவோட பேசற சந்தர்ப்பம் இனி அமையுமானு தெரியல.. பிக்பாஸ் போன காரணம்.. தினேஷ் பளிச்!

சின்னத்திரை நடிகரான தினேஷ் (Dinesh), பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவுக்காக தான் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்துகொண்டதாகவும், பிக்பாஸ் ட்ராஃபியை வென்று அவரிடம் கொடுப்பதே தன் லட்சியம் என்றும் இந்நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சொல்லி வந்தார்.

ஆனால் முதல் சில வாரங்களில் பெற்ற வரவேற்பைத் தக்க வைக்க தினேஷ் தவறிவிட்டார். ஃபினாலே நாள் வரை சென்ற தினேஷ் 4ஆம் இடம் பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தான் நிறைய ஆசை, கனவுகளுடன் பிக்பாஸில் கலந்துகொண்டதாகவும், கடுமையாகப் போட்டியிட்டே தான் வெளியேறியுள்ளதாகவும் தினேஷ் இறுதி மேடையில் கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

'முயற்சி பண்ணேன் ஆனா..'

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கடந்த சில நாள்களாக தினேஷ் யூட்யூப் சேனல்களுக்கு தினேஷ் பேட்டியளித்து வருகிறார். இதில் தனது பிரிந்திருக்கும் மனைவி ரச்சிதா பற்றியும் பிக்பாஸ் பற்றியும் தினேஷ் மனம் திறந்து பேசியுள்ளதாவது:

“கல்யாண வாழ்க்கையில் ஒரு பிரிவு எனக்கும் ரச்சிதாவுக்கும் இருந்தது. அவங்களும் அனைவருக்கும் தெரிந்த  ஒரு செலிப்ரிட்டி தான். ஒரு செலிப்ரிட்டி வாழ்க்கையில்  இருந்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிரிவு வரும்போது அதைக் கையாள்வது ரொம்ப கஷ்டம். அதனால் நான் அந்த விஷயத்தை சரிபண்ண நிறைய முயற்சிகள் எடுத்தேன். அவரது குடும்பத்தினரும் எடுத்தார்கள். நானும் எடுத்தேன்.

‘இதுக்காக கோப்பைய வெல்ல நினைச்சேன்'


Bigg Boss Dinesh: ரச்சிதாவோட பேசற சந்தர்ப்பம் இனி அமையுமானு தெரியல.. பிக்பாஸ் போன காரணம்.. தினேஷ் பளிச்!

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய கேப் கிடைக்கும் இல்லையா.. அப்ப ஒரு மைண்ட் செட் ஆகிடும். அந்த மைண்ட்செட்ட தாண்டி அந்த விஷயத்தை சரிசெய்ய ஒரு விஷயம் நடக்கணும். அந்த தருணமா நான் பிக்பாஸ நினைச்சேன். 

இந்த முயற்சி பலனளிக்குமானு தெரியாது. நாம இத ட்ரை பண்ணுவோம்னு நினைச்சேன். அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள்னு நான்கு உறவுகளில் எந்த பிரச்னை நடந்தாலும் அதுல முழு முயற்சி செய்யணும் அப்படிங்கறது என் பாலிசி. பிக்பாஸ் நிகழ்ச்சி ரச்சிதாவுக்கு ரொம்ப பிடிக்கும். முந்தைய சீசன்கள பாத்துட்டு வீடியோக்கள் பதிவிடுவாங்க. போன சீசன்ல 90 நாள் வரை இருந்துட்டு வந்தாட்டங்க. அதனால பிக்பாஸ் கோப்பைய வின் பண்ணி ரச்சிதாவிடம் கொடுத்தால் அது உத்வேகமா இருக்கும்னு நினைச்சேன். அத தவிர வேற எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை. இதுக்கு அப்பறம் வேற அவருடன் பேசும் சந்தர்ப்பம் அமையுமானு தெரியல. 

‘என்னால இதை செய்ய முடியல’

அவங்க அதே ஸ்டேண்ட்ல தான் இருப்பாங்க. அதனால் இதுக்கு அப்றம் எப்படி இதைக் கொண்டு செல்வது என எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு அவங்க செட் செய்திருக்கும் வேலிக்குள் என்னால் செல்ல முடியவில்லை.

விசித்ராவுடன் இப்படி சண்டை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. விசித்ரா அழகா சூப்பரா ஒரு கேம் விளையாடினாங்க. நான் நானா இருந்தது அவங்களுக்கு ஒரு தடையா இருந்ததா எனத் தெரியவில்லை. நான் கேப்டனான இருந்தபோது என்னை என் வேலையை செய்ய விடாமல் அவர் தடுத்ததால் தான் சண்டை. மாயா - பூர்ணிமாவிடம் உட்கார்ந்து இந்த மனுஷன என்ன பண்ணலாம் என பேசினதா அவங்களே சொன்னாங்க. விசித்ரா சொல்வதனால் நான் அப்படி ஆகிவிட மாட்டேன்” எனப் பேசினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget