மேலும் அறிய

Tamizha Tamizha: ‘என் வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம்’.. நடிகை அர்ச்சனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம் குறித்து பேசியுள்ளார். 

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம் குறித்து பேசியுள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து ஜீ தமிழ் சேனலில் ”தமிழா தமிழா” நிகழ்ச்சி  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதலில் இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். தமிழ் விவாத நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக தமிழா தமிழா திகழ்ந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல காரணங்களால் இயக்குநர் கரு.பழனியப்பன் விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனிடையே தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் நிறுத்தப்பட்டிருந்தது.  ரசிகர்கள் ”தமிழா தமிழா” நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. 

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையில் வாராஹி அம்மன் செய்த மகத்தான சம்பவம் குறித்து  பேசியுள்ளார். அவர் தனது உரையில், “ என்னுடைய 5 வயதில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்த நான் ஏன் என்னுடைய தங்கை மாதிரி அம்மா, அப்பா கூட இருக்க முடியல என அவரிடம் கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி, ‘உனக்கு பிறக்கும்போதே ஜென்மத்துல சனி. அதனால் அப்பா, அம்மா பிரிஞ்சிருவாங்கன்னு இருக்கு. அதனால ஏதாவது ஆகிடும்ன்னு இங்க பாட்டி, தாத்தா கூட இருக்கிறாய்’ என சொன்னார்கள். எங்க பாட்டி வீட்டுல தனியா ஒரு பூஜை ரூம் இருந்துச்சு. ஐயப்பன் சாமி தான் உனக்கு அப்பா, முண்டகக்கண்ணி அம்மன் தான் உனக்கு அம்மான்னு நினைச்சிக்க. உனக்கு அப்பா, அம்மா இல்லைன்னு நினைக்க வேண்டாம் என சொல்லியே சின்ன பிள்ளையில் இருந்தே வளர்த்துள்ளார்கள். 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்கு எல்லாமுமாக சாமியை தான் நினைக்கிறேன். சாமிகிட்ட உட்கார்ந்து பேசுறது, நான் அழுதாலோ அல்லது கேள்வி கேட்டாலோ மணி அடிக்கிறது, பல்லி எட்டிப்பார்த்து எனக்கு பதில் சொல்றது இதெல்லாம் சொல்றதுக்கு காமெடி இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையின் தாக்கங்கள் இவை. 

ஒருமுறை என்னுடைய வீட்டுக்குள் வாராஹி அம்மன் வரணும்ன்னு, அந்த சிலையை பார்த்து அழகா இருக்குன்னு வீட்டுக்கு வாங்கிட்டு வர்றோம். அட்டை டப்பால வந்த அம்மனை வெளியே எடுத்து பூஜையறையில் வைத்து அம்மா கும்பிட்டு போய்ட்டாங்க. அதன்பிறகு நான் குடும்பத்தோட கூர்க் நகருக்கு சுற்றுலா சென்று விட்டோம். 3 நாட்களாக வீட்டில் இருந்த அக்கா, ‘திடீர்னு உறுமுற சத்தம் கேட்குது. பாத்திரம் பறக்குது.. என்னன்னு தெரியல’ என சொன்னார். உடனே நாங்க வாராஹி உபாசகருக்கு போன் பண்ணி விவரம் கேட்டோம். 

அதற்கு அவர், ‘நீ பயப்படாம தூங்கு.. பிரம்ம முகூர்த்தத்தில் உனக்கு பதில் சொல்லுவாங்க’ என சொன்னார். என்னுடைய கனவில் வந்த அம்மன், ‘நீ என்ன என்னைய அட்டை பெட்டியில தூக்கிட்டு வர்ற. பல்லாக்கில் தானே தூக்கிட்டு வரணும்’ என தெரிவித்தார். அதன்பிறகு 48 நாட்களுக்குள் அந்த அம்மனை அலங்கரித்து, பல்லாக்கில் தூக்கி வந்து அபிஷேகம் செய்தேன். இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Embed widget